அப்பாவி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சுஹானி. அந்தப்படம்
வெளிவருவதற்கு முன்பே அவரது இரண்டாவது தமிழ் படமான இரண்டு முகம் வந்துவிடும் போலிருக்கிறது. இப்படம் தொடர்பான ஒரு விழாவுக்கு வந்திருந்த சுஹானியை பார்க்க இரண்டு முகம் மட்டுமல்ல, ஆயிரம் முகங்கள் அலைபாய்ந்தன என்பதுதான் கொடூரமான உண்மை.
பின் வரிசையில் அமரப்போன சுஹானியை வம்படியாக முன்னுக்கு வரச்சொன்னார்கள் போட்டோகிராபர்கள். (முன்னுக்கு வரணும் என்பதற்காகதானே இப்படி ஒரு டிரஸ்சோடு வெளியிடங்களுக்கு வர்றாங்க) இப்படி ஒரு வரவேற்பு தனக்கு இருக்கும் என்று கனவில் கூட அவர் நினைத்திருக்க போவதில்லை. பிளாஷ் மழையில் நனைந்தார் சுஹானி.
ஒரு இனிப்பான ஒற்றுமை. அவர் அணிந்திருந்த அந்த துளியூண்டு டிரஸ்சின் கலரும் ப்ளு!