|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
இத்தொடர் குறித்த உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி- karuppuserial@gmail.com

பொட்டணம் முதல் பட்டணம் வரை... 6

கமலு சாரு படத்தையே வேணாம்னு சொல்ல வச்ச அந்த சங்கதி என்னான்னு தெரிஞ்சுக்க நீங்கள்ளலாம் ஆர்வமா இருந்திருப்பிய. அத சொல்றதுக்கு ரெண்டு வாரம் ஆயிருச்சு. ஏன்னா நிறைய படத்துல நடிச்சிட்டு இருக்கேனா. நிக்க நேரம் இல்ல. நிமிர நேரம் இல்ல. து£ங்கும் போது கொசு கடிச்சா கூட ஸ்டார்ட், ஆக்ஷன்னு சொன்னாதான் கையி கொசுவை கொல்லும் போலருக்கு. அப்படி ஒரு மிசினு மாதிரி நடிக்க வேண்டியதாப் போச்சு. இந்த தொடரு அப்பப்ப ஸாட்டிங் டிரபுளு ஆச்சுன்னா, நானு வெளியூர்ல இருக்கேன்னு அர்த்தம்.

சரி வெசயத்துக்கு வருவோம். தலை முடிய வெட்டு, தாடிய எடு, மொட்டைய போடுன்னு கமல் சாரு ஆபிஸ்ல சொல்றாங்க. நானும் ஆத்தாவும் சேர்ந்து இந்த பொக்கிஷத்தையெல்லாம் அந்த கருப்பு சாமிக்கு தர்றோம்னு வேண்டிகிட்டதையும், அத நிறைவேத்தாம மொட்டைய போட்டா கருப்பு கோவிச்சுக்கும்னும் இவங்ககிட்ட சொன்னா புரியுமான்னும் தெரியல.

kanja_karuppuதொட்ட தொண்ணு£ருக்கும் ஆத்தா கருப்ப சாமிய கூப்டுதான் யோஜனை கேட்கும். பிதாமகன் படம் முடிஞ்சு நானு ஊருக்கு போனப்ப ரெண்டு நாளு காய்ச்சல் வந்திருச்சு. சரக்கு டூப்ளிகேட்டா, அல்லது மிக்சிங் சரியில்லயா தெரியல. ஆத்தாவுக்கு என்னா. படக்குன்னு கருப்பு சாமீய். எம்புள்ளைக்கு ஒண்ணும் ஆவக் கூடாது. கோவுல்ல வச்சு மொட்டைய போட்றேன்று வேண்டிகிச்சு. திரும்ப மெட்ராசு கௌம்பும்போது, கருப்பு... கண்ட கடையில முடிய வெட்டிராத. கொஞ்சம் வளந்ததும் வந்து கருப்புக்கு காணிக்கை கொடுத்திட்டு போயிருன்னு சொல்லவும் நானும் சரின்னு சொல்லிட்டேன். அப்படியாப்பட்ட முடியதான் கமல் ஆபிஸ்ல கேட்குறாவ. நானு என்னத்தை சொல்றது? வாயவே தொறக்காம வந்துட்டேன்.

இப்படி அடிக்கடி வெளிய போறதையும் நடிக்க அலையுறதையும் பாலாண்ணன்கிட்ட ஒருத்தரும் சொல்லல. நானும் அது வெளிய தெரியாமதான் வேலைய பாக்குறேன். ஒருநா காலையில எட்டு மணியிருக்கும். மீனு அரிஞ்சுகிட்டு இருக்கேன். போனு... ஓடிப்போயி எடுத்தா அமீரு ஆபிசுலேர்ந்து பேசுறோம். அங்க கருப்பு இருக்காராங்கிறாய்ங்க. அமீரண்ணன நான் சேது படத்து சூட்டிங் அப்பவே பார்த்திருக்கேன். ஒரு தடவ அந்த சூட்டிங்கை வேடிக்க பார்க்க போயிருக்கேன். அப்ப என்னய பாலாண்ணனுக்கும் தெரியாது. அமீரண்ணனுக்கும் தெரியாது. பொறவு அவங்க ரெண்டு பேரும் தனித்தனியா ஆயிட்டாங்க.

அமீரு ஆபிசுன்னதும் எனக்கு புரிஞ்சுபோச்சு. அவருதான் இவருன்னு. ஆனா அந்த போனு எனக்குன்னு நெனக்கல. இந்த ஆபிஸ்ல அவரோட முன்னாடி வேல பார்த்த யாருக்கோதான் பேசுறாங்கன்னு நினைச்சுகிட்டே என்னா வெசயம்னு கேக்குறேன். அங்க கருப்புன்னு யாரு இருக்காங்கன்னு கேக்குறாங்க. அட நான்தாம்ங்க அதுன்னு சொன்னதும் ஆபிசு வரைக்கும் வந்துட்டு போங்க. ஒரு கேரட்டரு இருக்குன்னு சொல்லவும் எனக்கு பயங்கர கொழப்பம். சரிண்ணே... எத்தனை மணிக்கு வரட்டும்னு மட்டும் கேட்டுகிட்டேன்.

போன வச்சிட்ட பொறவு அண்ணனுக்கு தெரிஞ்சா என்ன சொல்லுவாரோன்னு ஒரு யோஜனை. போறதா, வேணாமான்னு கொழப்பம். அப்படியே கிச்சனுக்கு போயி மீனை புடிச்சு கல்லுல வச்சு தேயு தேயுன்னு தேச்சுட்டு இருக்கேன். மறுபடி ட்ரிங்கு ட்ரிங்குன்னு சத்தம். போனுதான். எடுத்தா மண்டையில ஃபேன் கழண்டு வுழுந்தா கூட அப்படி ஒரு கிறுகிறுப்பு வராது. எனக்கு வந்திருச்சு.

டைரக்டரு சங்கரு கம்பெனியிலேர்ந்து பேசுறோம். ஒரு கேரக்டரு இருக்கு. வர்றியளான்னு கேட்குறாங்க. பாலாண்ணனுக்கு வெசயம் தெரிஞ்சு எவனையாவது விட்டு வெறுப்பேத்துறாரா, இல்ல எவனாவது நம்ம சினிமா ஆசைய வச்சு களி கிண்டுறானான்னு ஒரே கொழப்பம். இருந்தாலும் அவங்க கொடுத்த இடத்துக்கு போயிரலாம்னு முடிவு பண்ணிட்டேன். அவசரமா அறிஞ்சு வச்ச மீனையெல்லாம் மசாலாவுல தடவி வெச்சுட்டு நைசா கௌம்பிட்டேன்.

வந்தா கேரட்டரு. வரலன்னா அலைச்சலு. போவியா. இதுக்கு போயி என்னாத்துக்கு கொழம்பணும்னு எனக்கு நானே கேள்விய கேட்டு அதுக்கு பதிலும் சொல்லிட்டு கௌம்பிட்டேன். போனா... ஒரு அம்பது அறுவது பேரு வரிச கட்டி நிக்குறாய்ங்க. ஒவ்வொருத்தனயா ரூமுக்குள்ள கொண்டு போயி வச்சு அத பேசு. இத பேசு. குதி. சிரின்னு என்னென்னவோ சொல்ல சொல்லி வீடியோவுல படம் எடுக்குறாய்ங்க.

இப்ப ஈரம்னு ஒரு படத்த எடுத்தாரே, டைரக்டர் அறிவழகன். அப்ப அவருதான் சங்கர் சாரோட அசிஸ்டென்டு. என்னைய கூப்டு நடின்னு சொல்லி வீடியோ எடுத்தவரும் அவருதான். அந்நியன் படத்துல சார்லி சாரு நடிச்சிருப்பாரே ஒரு கேரக்டரு. அதுதான் நான் நடிக்க வேண்டியது. பார்க்குல வேல இல்லாதவன் படுத்து கிடந்தா எப்படி கெடப்பான். அது மாதிரி நடின்னாரு அறிவழகன். சும்மா படுத்துக் கெடக்காம நானு அங்க நின்னுகிட்டு இருந்த ஒரு ஆள கூப்புட்டு பக்கத்துல நிக்க வச்சுகிட்டு அவன வெறுப்பேத்துற மாதிரியெல்லாம் என்னென்னவோ செஞ்சு அசத்துறேன். எல்லாத்தையும் வீடியோவுல படம் புடிக்கிறாரு அவரு.

எடுத்து முடிச்சதும் என்ன நெனச்சாரோ, அங்கயிருந்த ஒருத்தர கூப்புட்டு இவரு சட்டய அளவெடுங்கன்னாரு. அங்கனையே நான் முடிவு பண்ணிட்டேன். நம்மதான் இந்த கேரக்டருக்குன்னு. கௌம்பும்போது கையில 250 ரூவாவ கொடுத்து கொஞ்ச நேரத்துல போன் பண்றேன். போன்னு அனுப்பி வச்சாரு அறிவழகன்.

அப்புறம் ஏன் அதுல நடிக்கல....?

(அட்ட'ஹாஸ்யம்' தொடரும்)

இத்தொடர் குறித்த உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி- karuppuserial@gmail.com
Comments

ஐயா கருப்பையா சாமி, தயவு செய்து ஒரே அடியா எழுதி முடிச்சிடுயா இந்த வரலாறை, நீ முடிக்கிறதுக்குள்ள வயசாயிடும் போல இருக்கு. வேணாம் என்று நெனைச்சாலும் முடியல, ஒரு தடவ படிச்சிடலாம் ஏன்னு தோணுது. சீக்கிரம்... நீ சூட்டிங் சூட்டிங் அலைஞ்சிட்டே இரு போ. கருப்பண்ண சாமிக்கிட்டதன் கம்பிளைன்ட் பண்ணனும். அப்பத்தான் நீ திருந்துவ ஓ.

சுதேசன் - மட்டக்களப்பு, இலங்கை

வணக்கம் உங்களுடைய நகைசுவை மிக பிடிக்கம்

S.Chitu

hi karupu............unga life story romba nalla & naturala iruku.......ungalamaethri ........enaku peditha nadigarkalil nengalaum oruvar..so nenga eppothum ameer director maraka kodathu ...ithu en chinna advice ........ok ......u rocking valavanthan .......

this is rafeq........dxb(u.a.e)

Anne, karupanne, vazhthukkal. Unga vazhkayin oru oru nimidamum yetho oru vagyil intresta than poikittirunthirukku. Ellame padikkumbothu romba santhoshama irukku. Aduthu enna nadanthathunnu therichikka aavala irukken. Unga ethirkalam prakasama irukka andavanai prathikkiren.

- S.Thanigaivel

Nalla iruku ............. innum nalla supera eluthunga

- ganesh

Vankam ganja anna, Unga kadhai nalla iruku enna intresting gap o kondu iruku Enunge kadha rombu superunge…

- Salman Sherief

Hi Mr. Karuppu, your serial is very very interesting. Also you are using your language good suitable for your serial. welldone & Keep it up.

-P.A.B.Fazlurrahman, Dubai.

Anneay Rendavuthu Varamum Superu. Ulla Poathu Nepoliyana , M.Cyo ?. Athu Ulla Ponaley Thani KETHULA. Antha Varthaya Seekiram Ezhuthugana. .

- Veeran

கஞ்சா அண்ணே... உங்க தொடர் சூப்பரண்ணே.... நீங்கள் தொடர்ந்து வெற்றிபெற உங்களை வாழ்த்துவதோடு இறைவனிடமும் பிரார்த்திகிறமண்ணே....

உங்கள் தொடரை தொடர்ந்து படிப்பதற்கும் ஆவளோடு இருக்கமண்ணே....

-- துபாய் தமிழன் --

மண்மணம் மாறாத பேச்சு தமிழ் இயல்பான உரையாடல் சுயசரிதைபுனைவதில் புதியபாணி மண்ணின் மைந்தன் கஞ்சா கருப்பு எழுதும் தொடர் கதை சிறப்புடன் வெற்றி பெற எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

என்றுன் அன்புடன்
யோகி நோர்வே

Vanakkam kanja anna,

:D perila irukurathai polavey ungada intha thodarlaiyum Sema kick na. Ennada oru episode thaney eluthi irukom. Athukkula ivan ippadi over ah pessuraney nu neenaikatheenga na. Oru paanai sothukku oru soru patham nu solluvaanga la... Athu pola thaan ithuvum.

Appadiey neenga pessura thamizh ah eluthuruvila kondu varanum nu neenaichirukeenga. Athukkey oru periya sabash podalam. Aarambathila pottirukeengaleyy baala anna , ameer anna thunai nu.... Athuvey pothum na ungada manasai purinchukka. Cinema la pothuvavey ellarum avanga muthal muthal ah eduthu vacha Adi ah maranthudurathu thaan vazhakkam. Aanal neenga athai marakaama appadiye irukeenga. Neenga unnmaikkum vellai manasu kaaran thaan.

Ellarukkum pidicha oru nagaichuvai nadigar ah irunthum.... Ungada unnmaiyaana aaramba kaala vaazhkaiye appadiye... ulla padi maraikkamaa sollureenga. Ithukku Romba Thillu venum na. Athu unga kitey irukkurathai neenaikka santhosama irukku. Thevai illatha polithanamana perumai la mayangidaama, Ungada aaramba kaalathai marakkama.... neenga neengalaavey innum irukurathai neenaikka, unmaikkum santhosama irukku na.

Ungada muyarchi ku ennudaiya manamaarntha vaazhthukal / paaraattukal. Ungaludaiye vaazhkaiyil innum pala saathanaigalukku neenga sonthakaaranaga vendum. 

Nandri - Vanakkam.

Ippadikku

Ungalaal vairu punnaagiyee oru Rasigan.

கஞ்சா கருப்பு சார். உங்க தொடர் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு. உங்க வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் ஒன்று விடாமல் எழுதுங்க. படிப்பதற்கு ஆவலாக காத்திருக்கிறேன்.

மஞ்சரி
தஞ்சாவூர்

Superu'la. Padika Padika,Ennomo Karupu Namma Kitta Pesura Mathirilla Iruku.

Atta 'hasyam '

பாலாண்ணே, அமீரண்ணே துணை. கட்டுரையின் முதல் வார்த்தையே உங்கள் மீது பெரிய மரியாதையை வரவழைக்கிறது. நீங்க இன்னும் நல்ல இடத்தை பிடிக்க வாழ்த்துகிறேன்.

அப்துல்லா
அபுதாபி

முதல் படத்தில் ஆரம்பிச்சு இப்போது நடிக்கிற படம் வரைக்கும் எழுதுவீங்கன்னு நினைக்கிறேன். ஒரு வாரம் வரைக்கும் வெயிட் பண்ணுவது கஷ்டமாக இருக்கிறது. அடிக்கடி எழுதலாமே? ஷ§ட்டிங்கில் பிசியா இருந்தா சிரமப்பட வேண்டாம். நிதானமாக எழுதுங்க. உங்களுக்கு ஏதாவது லவ் இருந்திச்சா? இருந்தா அதை பற்றியும் எழுதுங்க.

மணிவண்ணன்
கோட்டூர்புரம், சென்னை

 
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter