அத்தியாயம் 8
சென்னை வந்ததும் தன் செல்வாக்கை பிரயோகித்தார் நடிகர்.
அப்புறமென்ன..... விபச்சார வழக்கில் நடிகையை தூக்கி உள்ளே போட்டார்கள். அப்போது அந்த விவகாரம் நாடுமுழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்த கைது பின்ணனி தெரியாதவர்கள்... ‘பலநாள் திருடி ஒருநாள் அகப்பட்டுக் கொண்டார்’ என நினைத்தார்கள்.
இனி..... அடுத்த கதையை பார்ப்போம்.
வீணை போன்ற இசை கருவி ஒன்றின் பெயரைக் கொண்ட வித்தாராமான நடிகை அவர்.
அந்த மான் நடிகரோடு ஒரு படத்தில் நடித்தார். கதைப்படி... போர்வைக்குள் இருவரும் சில்மிஷம் செய்வது போல ஸீன். அந்த காட்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த போது... நடிகை மீது மோகம் கொண்ட நடிகர்.. நடிகயின் அங்கத்தில் தொடக்கூடாத இடத்தில் தொட்டார்.
தெரியாம கை பட்டிருக்கும்னு நினச்ச நடிகை.. சும்மா இருந்தார். ஆனால் நடிகையிடம் எதிர்ப்பு இல்லாததால் தன் சில்மிஷத்தை மறுபடி தொடர்ந்தார் நடிகர்.
‘பய வெளாடுறானே’ என கடுப்பான நடிகை அடுத்த முறை நடிகரின் விரல் நீண்ட போது எதிர்ப்பு தெரிவித்தார் நடிகை.
‘நீ என்ன பத்தினி திலகமா?’ எனக் கேட்டு வைக்க.. போர்வையை விலக்கிக் கொண்டு எழுந்த நடிகை விட்டார் ஒரு பளார். அதிர்ந்து போனார் நடிகர். யூனிட் அரண்டு போனது.
நடிகை இப்படி கை நீட்டியது... அவரின் துணிச்சலைக்காட்டினாலும்... உடன் படாதா இவளோடு ஜோடி போட்டு ஒடு பிரயோஜனமும் இல்லை... என மற்ற ஹீரோக்கள் தங்கள் படங்களில் வாய்ப்புத் தராமல் விட்டனர்.
இதனால்... அழகும், திறமையும், இளமையும் நிறந்த அந்த வித்தாராம் விரைவிலேயே கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக டீ-புரமோட் பண்ணப்பட்டார்.
அதன் பின் குமார டைரக்டர் படம் ஒன்றில் பஞ்சாயத்து நடிகரோடு ஒரு படத்தில் முக்கிய ரோலில் நடித்தார்.
பஞ்சாயத்து பல முறை முயற்சி பண்ணியும் கண்டு கொள்ளவில்லை இந்த அழகுப் பொண்ணு.
இதனால் தன் நண்பரான டைரக்டரை கூப்பிட்டார்.
‘அந்த கட்டிப்பிடிக்கிற ஸீனை... அதோடு நிறுத்தாம அப்படியே.... தொடர்ந்து உருண்டு புரள்வது போல நீட்டச் சொன்னார்.
அதன்படியே காட்சி அமைக்க ஏற்பாடு ஆனது.
ஸ்டார்ட்... கேமரா... அக்ஷன்....
சத்தம் கேட்டதுமே.... நடிகையை பாய்ந்து பிடித்து உருட்டோ உருட்டென உருட்டி தன் தாகத்தை வெளிப்படுத்தினார் பஞ்சாயத்து.
ஏற்கனவே ஒருமுறை கை நீட்டியதால் வாய்ப்புகல் பறிபோனதால்..... இந்த முறை அமைதியாகவே இருந்தார்.
‘எதுக்காக இந்த உருட்டல்னு தெரியும். ஆனாலும் நான் சம்மதிக்க மாட்டேன்.... என்பது போல ஒரு பார்வை பார்த்தார்.
விளைவு அந்த படத்தில் அந்த நடிகையின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
இப்படி கட்டுப்பாடாக இருந்தவரை..... உருட்டி உருட்டி கரைத்து காரியம் சாதித்தார்கள் பின்னாளில்.
ஹீரோவுக்கு வயசு அதிகம்!
ஹீரோயினுக்கு கம்மி.
ஆனால் ஹீரோ... ரொமபவே தொல்லை தர.... மேக்-அப் மேனை வைத்து ஹீரோவுக்கு வச்சாரே ஒரு ஆப்பு!
அந்த ஆப்பு... ஸீன்.....
( அடுத்த ஸீன் ) |