|
கிருஷ்ணகிரி
| தலைநகர் |
கிருஷ்ணகிரி |
| பரப்பு (ச.கி.மீ) |
5143 |
| மக்கள் தொகை (2001) |
ஆண்கள் |
7,95,718 |
| பெண்கள் |
7,50,982. |
| மொத்தம் |
15,46,700 |
| மக்கள் நெருக்கம் |
301 |
| ஆண், பெண் விகிதம் |
944 |
| எழுத்தறிவு |
݇ |
67.11 |
| ªð‡ |
48.62. |
| ªñ£ˆî‹ |
58.11 |
அமைவிடம்
கிழக்கில் வேலு£ர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களும், மேற்கில் கர்நாடக மாநிலமும், வடக்கில் ஆந்திர மாநிலமும், தெற்கில் தருமபுரி மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
புவியியல் அமைவு
| அட்சரேகை |
11°.
12-12°.
49 N |
| தீர்க்கரேகை |
77°.
27-78°.
38°
E |
கிழக்குப்பகுதி வெப்பமானது. மேற்குப் பகுதி குளிரானது.
வரலாறு
வரலாற்றிற்கு முற்பட்ட கால வரலாறு கொண்டது. கிருஷ்ணகிரி, ஒசூர், ஊத்தங்கரை முற்காலத்தில் முறையே இயல் நாடு, முரசு நாடு, மற்றும் கோவூர் நாடு என்று வழங்கப்பட்டன. சோழர் காலத்தில் கிருஷ்ணகிரி பகுதி “நிகரில் சோழி மண்டலம” எனச் சிறப்பிப்பட்டது. நுளம்பர்களின் காலத்தில் இது நுளம்பபாடி எனப்பட்டது. சேலம், தருமபுரி, கிரிஷ்ணகிரி, மற்றும் மைசு{ர்
பகுதிகள் தகடூர் நாடு எனப்பட்டது. சங்க காலத்தில் ஃநெல்லிக்கனிஃ புகழ்பெற்ற அதிய மான் ஆண்ட பகுதி. பல்லவர், கங்கர், நுளம்பர், சோழர், ஹொய்சாளர், விஜயநகரப் பேரரசு, பிஜப்பூர் சுல்தான்கள், மைசு{ரின் உடையார்கள், மதுரை நாயக்கர்கள் என்று பல்வேறு ஆட்சியின் கீழிலும் இடம்பெற்றிருந்தது. இப்பகுதியின் 12 கோட்டைகள் “பாரமகால் கோட்டைகள்” எனப்பட்டன.
விஜயநகரப் பேரரசால் கட்டப்பட்ட கிருஷ்ணகிரி மலைக் கோட்டை தற்போதும் சிறப்புடையது. மாவட்டத்தின் “குண்டனி” பகுதி 13-ஆம் நு£ற்றாண்டில் ஹொய்சாள மன்னன் வீர ராமநாதனின் தலைமையிடமாக இருந்தது. முதல் மைசூர் போட்டோல் காவேரிப்பட்டினத்திலுள்ள ஹைதரலியைத்தாக்க இவ்வழியாகச் சென்ற பிரிட்டிஷ் இராஞீவம் இங்கே தோல்வியைத் தழுவியது. இரண்டாம் மைசூர் போட்டோல் சேலம் மற்றும் கர்நாடகப் பகுதிகள் முழுமையும் ஹைதரலியின் ஆதிக்கத்திற்குட்பட்டன. எனினும் ஸ்ரீரங்கப்பட்டின ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சேலம் மற்றும் பாரமஹால் பகுதிகள் முழுமையும் பிரிட்டீஷார் வசமாயின. 1792-இல் காப்டன் அலெக்சாண்டர் ரீட் இப்பகுதியின் முதல் ஆட்சித்தலைவரானார். அன்றைய சென்னை மாகாண ஆளுனர் ராபர்ட் கிளைவின் ராஜதந்திரத்தால் கிரிஷ்ணகிரி பாரமஹாலின் தலைநகரானது. 1794 இல் இங்கு நாணய சாலை ஒன்று உருவாக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்கள் இங்கு வார்க்கப்பட்டன. பிரிட்டீஷாரின் வலிமைமிக்க ராயக்கோட்டை பிற்பாடு தனது முக்கியத்துவத்தை இழந்தது. தரும்புரி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கிருஷ்ணகிரி மாவட்டம் உருவாக்கப்பட்டது (நவம்பர், 2003). இது தமிழத்தின் 30 ஆவது மாவட்டம்.
சட்டசபைத் தொகுதிகள்-5
ஒசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர்.
பாராளுமன்றத் தொகுதிகள்-1
கிரிஷ்ணகிரி
மொழிகள்
தமிழ், தெலுங்கு, கன்னடம்..
மழையளவு
வருட சராசரி 830 மி.மீ.
முக்கிய ஆறுகள்
காவிரி, தென்பெண்ணை, வன்னியாறு, மார்க்கண்டா ஆறு.
அணைக்கட்டுகள்
கிரிஷ்ணகிரி நீரத்தேக்கம், சூளகிரி-சின்னார் நீர்த்தேக்கம், பம்பாறு நீர்த்தேக்கம்.
விவசாயம்
நெல், சோளம், வாழைப்பழம், கரும்பு, பருத்தி, புளி, மாங்காய், நிலக்கடலை, காய்கறி மற்றும் தோட்டவிளை பொருட்கள். சுமார் 5069 ஏக்கரில் மல்பெரி (பட்டுப்புழு வளர்ப்பிற்குப் பயன்படுவது) பயிரிடப்படுகிறது.
கனிமம்
கறுப்பு பளிங்குக்கல் (பாரடைஸ்)
போக்குவரத்து
தேசிய நெடுஞ்சாலைகள் : எண்7 கன்னியாகுமரி-காஷ்மீர். எண் 48 சென்னை-பெங்களுர். எண் 66 பாண்டிச்சேரி-பெங்களுர். எண் 207 சார்ஜாபூர்-பாகலு£ர்-ஒசூர். எண் 219 கிரிஷ்ணகிரி-குப்பம்.
வழிபாட்டிடங்கள்
பென்னீஸ்வர முர்த்தி, லெக்ஷ்மி நாராயணா ஆலையம் (கிரிஷ்ணகிரி), குண்டீஸ்வரர் ஆலையம் (சின்னகோது£ர்), அங்காளம்மன் ஆலையம் (காவேரிப்பட்டினம்), சுந்திரசூடேவரர் ஆலையம் (ஒசூர்), புனிததர்ஹா (தேன்கனிக்கோட்டை), து£ய இருதய தேவாலயம் (கிரிஷ்ணகிரி).
நினைவிடங்கள்
ராஜாஜி நினைவில்லம், கிரிஷ்ணகிரி, ராயக்கோட்டை.
|