|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயலுக்கு நடி‌கை நயன்தாரா 5 லட்சம் நிதியை ஜெயலலிதாவிடம் வழங்கினார் - ஆச்சார்யா விலகலுக்கு பாஜகவை கண்டித்து திமுக கண்டனம் - தமிழகத்தில் மின் பற்றாக்குறையால் தொழில் தொடங்க தயங்குகின்றனர்: விஜயகாந்த் - 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்: எஸ்ஸார் குழுமம்
|
|
|
|
இட்லி பட்டாணிபாத்
கோதுமை இடியாப்பம்
வாழைப்பழ அல்வா
உருளைக்கிழங்கு சப்பாத்தி
உப்புமா வடை
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
புழுங்கல் அரிசி அதிரசம்
பால்பர்பி
மீன் வடை
மசாலாப் பணியாரம்
இனிப்பு அணுகுண்டு
தேங்காய் அல்வா

கறி பஜ்ஜி

ஆந்திரா தேங்காய்ப்பொடி
வாழைத்தண்டு உருண்டை
காரட் முந்திரி பாயசம்
ஆப்பிள் அல்வா
தாம்பூல பணியாரம்
சேனைக்கிழங்குப் புட்டு
பாசிப்பருப்பு லட்டு
கேரட் கீர்
இனிப்பு இட்லி
வள்ளிக் கிழங்கு அதிரசம்
ரவா கோவா
சேனைக்கிழங்கு வடை
முள்ளங்கி சட்னி
அவரை பொரியல்
சேப்பங்கிழங்கு தேன்குழல்
காலிபிளவர் சாப்ஸ்
மைதா அடை
காலிஃபிளவர் சூப்
வாழைப் பூ உருண்டை குழம்பு
கடலைப் பருப்பு ஆம்லேட்
சுறா மீன் முட்டை கட்லெட்
முந்திரிப்பருப்பு வடை
மசாலா கட்லெட்
மாம்பழக் குழம்பு
பால் கறி குழம்பு
வாழைத்தண்டு மோர் குழம்பு
நெய்ச் சோறு
கதம்ப முறுக்கு
மராட்டிச் சக்ளி
வேர்க்கடலை மசால் வடை
மாத்தூர் வடை
சத்துமாவு அல்வா
கத்தரிக்காய் புளிக்குழம்பு
கேரட் அல்வா
பாசிப்பருப்பு பாயாசம்
ஐஸ்கிரீம்
மாம்பழ பர்பி

சத்துமாவு அல்வா

செய்முறை

கொண்டைக்கடலை, கேழ்வரகு, காராமணிப்பயறு, உளுந்து பயறு, நிலக்கடலை, கொள்ளு இவைகளை அதிகாலையில் ஊறவைத்து இரவில் நீரை வடித்து விட்டு ஒரு பாத்திரத்தில் போட்டு நல்ல வெயிட்டான பாத்திரத்தைப் போட்டு மூடிவிடவும். மறுநாள் முளைகண்டிருக்கும். இவைகளை தனித்தனியாக காய வைக்கவும். இரண்டுநாள் நன்கு காய்ந்ததும் பொன் வறுவலாக வறுத்துக் கொள்ளவும். (மேலே கூறியுள்ள தானிய பொருட்களையும் கல், மண் இன்றி அனைத்தையும் சுத்தப்படுத்தவும். பிறகு முளைகட்டவும்.) முளைக்கட்டாதப் பொருட்களையும் தனித்தனியாக வறுத்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, இத்துடன் ஏலக்காயைப் போட்டு மிஷினில் நைசாக அரைக்கவும். மாவை சற்று ஆறவிடவும். ஓர் அகலமான அடி கனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடி செய்துப் போட்டு பசும்பாலை ஊற்றி, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, பாகை காய்ச்ச வேண்டும். பாகு கம்பி பதம் வந்ததும் மாவுகளை சிறுகச் சிறுகக் கொட்டி, கட்டி விழாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். நன்றாக மாவு வெந்து திரண்டு (ஒரு முறை) வந்ததும் நெய்யை ஊற்றி, கிளறிக் கொண்டே முந்திரிப்பருப்பை இரண்டாக உடைத்து, நெய்யில் வறுத்து அல்வாவில் போட்டு நன்கு கிளறி விடவும். பிறகு, இரண்டு-மூன்று அகலமான சில்வர் பாத்திரத்தில் நெய்யைத் தடவி, அல்வா நன்றாக திரண்டு வந்ததும் தாம்பாளத்தில் கொட்டி கத்தி (அல்லது) தோசை எடுக்கும் கரண்டியால் நன்றாக பரப்பி துண்டுகளாக வெட்டிப் போட்டோமாறவும். (தாம்பாளத்தில் அல்வாவைக் கொட்டும் முன் முந்திரிபபருப்பை போடுகிறோம் அல்லவா? காய்ந்ததிராட்சையையும் நெய்யில் சற்று வதக்கி போட்டு கிளறிய பிறகு தாம்பாளத்தில் கொட்டவும்.) துண்டுகள் போடவும். (இந்த சத்துமாவு அல்வா பலவித சத்துள்ளதாகவும் இருக்கும். தானியங்கள் முளைக்கட்டுவதால் அதிக சத்துக்கள் கிடைக்கிறது. பயறு முளை கட்டி சேர்ப்பதால் ஈறு, பல் இவைகள் உறுதியாகிறது. பல் நோயும் வராது. குழந்தைகள் வளர்ச்சிக்கு நல்ல ஊட்டச் சத்தான மாவு(சத்துமாவு)-(சத்துமாவு அல்வா). இவைகளை சேகரிப்பதற்கும், மாவாக்குவதற்கும் கஷ்டப்பட்டாலும் இந்த சத்துமாவில் பலகாரம் செய்து சாப்பிட்டால் டானிக் தேவையில்லை.

 

தேவையான பொருள்கள்
சம்பா கோதுமை
100 கிராம்
கேழ்வரகு 100 கிராம்
கொண்டைக் கடலை
100 கிராம்
கம்பு
100 கிராம்
சோளம்
100 கிராம்
கருப்புமுழு உளுந்து
100 கிராம்
முழுப்பயறு
100 கிராம்
பெரிய
ஜவ்வரிசி
100 கிராம்
நிலக்கடலை
50 கிராம்
எள்
50 கிராம்
காராமணிப் பயறு
100 கிராம்
கொள்ளு
100 கிராம்
பாதாம் பருப்பு
100 கிராம்
முந்திரிப் பருப்பு
300 கிராம்
ஏலக்காய்
15
காய்ந்த திராட்சை
300 கிராம்
வெல்லம்
3 கிலோ
பசுநெய்
1/2 கிலோ
பசுவின் பால்
300மி.கி
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter