|
மாத்தூர் வடை
செய்முறை
பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலையை தோல் நீக்கி பொடி செய்து கொள்ளவும். கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக்கிக் கொள்ளவும். மைதாமாவு, ரவை, அரிசிமாவு, வெங்காயம், பச்சை மிளகாய், நிலக்கடலை, தேங்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவற்றை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு டால்டாவை சூடு செய்து அதில் ஊற்றவும். அத்துடன் வெந்நீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பிசைந்து வைத்திருக்கும் மாவை போட்டோ போல உருட்டிப் போடவும். இருபுறமும் வெந்ததும் எடுக்கவும். இது சாப்பிட மொறுமொறு என்று சுவையாக இருக்கும். நான்கு நாள் வரை கெடாமல் இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
மைதாமாவு
|
750 கிராம்
|
சிறியரவை
|
150 கிராம் |
அரிசிமாவு
|
50 கிராம் |
பெரிய வெங்காயம்
|
4 |
பச்சை மிளகாய்
|
10 |
வறுத்த
நிலக்கடலைப்பருப்பு |
200 கிராம் |
தேங்காய்
|
ஒரு மூடி
|
டால்டா
|
200 கிராம் |
எண்ணெய்
|
500 கிராம் |
மல்லித்தழை
கறிவேப்பிலை
உப்பு
|
தேவையான அளவு
|
|