|
கதம்ப முறுக்கு
செய்முறை
பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காராமணி ஆகியவற்றை கழுவி, கல் நீக்கி, தண்ணீரை இறுத்து விட்டு, காயவைக்க வேண்டும். நன்றாகக் காய்ந்ததும், எந்திரத்தில் கொடுத்து மாவாக அரைக்க வேண்டும். எள்ளையும் கழுவி, கல் நீக்கி, காயவைத்துக் கொள்ள வேண்டும். பெருங்காயத்தை சிறிது வெந்நீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, உப்பைப் போட்டு கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் அரைத்த மாவைப் போட்டு பிசைய வேண்டும். அத்துடன் எள்ளையும், பெருங்காயத் தண்ணீரையும் சேர்த்து நன்றாகப் பிசைய வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை தேன் குழல் குழாய்க்குள் வைத்து முறுக்கு போல் பிழிய வேண்டும். ஒரு முறைக்கு 4, 5 முறுக்குகள் பிழியலாம். முறுக்குகள் இரண்டு பக்கமும் சிவந்து வெந்ததும் எடுத்து விட வேண்டும். இதுவே கதம்ப முறுக்கு என்பது. சாப்பிட மொறுமொறுவென்று, மிகவும் சுவையாக இருக்கும். பலநாட்கள் வரை இருக்கும். ஒரு பெரிய டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
|
தேவையான பொருள்கள்
|
பச்சரிசி
|
400 கிராம்
|
உளுத்தம் பருப்பு
|
200 கிராம் |
காராமணி
|
200 கிராம் |
கடலையெண்ணெய்
|
400 கிராம் |
எள்
|
100 கிராம் |
பெருங்காயம்
|
சிறு துண்டு
|
உப்பு
|
தேவையான அளவு
|
|