|
பால் கறி குழம்பு
செய்முறை
ஓர் ஈயம் பூசிய பாத்திரத்தில் எருமைப் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் கொதிக்கையில் அரை தேக்கரண்டி உப்பை போடவும். பால் நன்றாகக் கொதித்து வரும்பொழுது இரண்டு தடவை கிளறி விட வேண்டும். பின்பு கெட்டித்தயிரை ஊற்றி, மேலும் கொதிக்க விடவேண்டும். சிறிது நேரத்தில் பால் விண்டு, தண்ணீர் வேறு, பால் கட்டிகள் வேறாகி விடும். அதை அப்படியே ஒரு மெல்லிய துணியில் வடிகட்ட வேண்டும். பால் கட்டிகள் துணியின் மேல் தங்கிவிடும். வடித்த நீரை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். துணியில் தங்கியுள்ள பால் கட்டிகளை அப்படியே ஒன்றாக சேர்த்து, அதே துணியில் சிறு முடிச்சாக கட்டி, ஓர் ஆணியில் தொங்கவிட வேண்டும். வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காய், முந்திரி பருப்பு, கசகசா, இஞ்சி ஆகியவற்றை அம்மியில் வெண்ணையைப் போல அரைக்க வேண்டும். அரைத்த விழுதில் வடிகட்டி தனியே வைத்துள்ள பால் தண்ணீரை ஊற்றி, நன்றாகக் கரைத்துக் கொண்டு ஒரு சல்லடையில் வடிகட்ட வேண்டும். அந்தக் கலவையை தனியே ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
ஓர் அகலமான பாத்திரத்தில் டால்டாவை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும், சீரகம், கிராம்பு, ஏலக்காய், ஆகியவற்றைப் போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு வதக்க வேண்டும். நன்றாக வதங்கியதும் தனியே வைத்துள்ள கலவையை ஊற்றி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூளைப் போடவும். சுமா£ர் 15 நிமிடம் கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாக சுண்டியதும், உருண்டைகளாக கட்டி வைத்துள்ள பால் கட்டியை சிறு துண்டுகளாக நறுக்கிப் போடவும். குழம்பு திரண்டு கொதி வந்ததும், அதில் நெய்யை ஊற்றி, பாத்திரத்தை கீழே இறக்கி மூடி வைக்க வேண்டும். சுமார் 10 நிமிடம் கழித்து சோற்றில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
எருமைப்பால்
|
ஒரு லிட்டர்
|
கெட்டித்தயிர்
|
ஒரு லிட்டர்
|
நெய்
|
6 டீஸ்பூன்
|
டால்டா
|
50 கிராம்
|
சீரகம்
|
டீஸ்பூன்
|
| கிராம்பு |
4 |
ஏலக்காய்
|
4 |
கசகசா
|
2 டீஸ்பூன்
|
பாதாம்பருப்பு
|
8 |
முந்திரிப்பருப்பு
|
50 கிராம்
|
தேங்காய்
|
அரை மூடி
|
வெங்காயம்
|
100 கிராம்
|
பூண்டு
|
1 |
இஞ்சி
|
சிறு துண்டு
|
பச்சை மிளகாய்
|
பெரியது 10
|
கொத்தமல்லி
|
சிறு கொத்து
|
மஞ்சள்தூள்
|
ஒரு டீஸ்பூன்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|