|
காலிஃபிளவர் சூப்
செய்முறை
முதலில் துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து, இறக்கி, பருப்புத் தண்ணீரை மட்டும் தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயைத் துருவி அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். காலிஃபிளவரை ஆய்ந்து, பூவை எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய துண்டுகளை சுத்தமான தண்ணீரில் கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். சோம்பு, பட்டை, கிராம்பு இவைகளை இலேசாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். தக்காளிப்பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மிளகு சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஓர் எவர்சில்வர் பாத்திரத்தில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளிப்பழங்களைப் போட்டு வதக்கிக் கொண்டு, பின்பு காலிஃபிளவர், பருப்புத் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட வேண்டும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, தட்டி வைத்துள்ள சோம்பு, பட்டை, கிராம்பு, பொடியாகத் தட்டிய மிளகு, சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு, சிவக்க வறுத்துக் கொண்டு, அதில் வேகவைத்த காலிபிளவர் பருப்புத் தண்ணீரை ஊற்றி இஞ்சியை நசுக்கிப் போட்டு, கொதிக்க விடவும். மஞ்சள் தூளைப் போடவும். நன்றாக கொதித்த பின், இறக்கி எவர்சில்வர் பாத்திரத்தில் கொட்டி, அத்துடன் தேங்காய்ப் பாலை ஊற்றி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும். பின்பு சோற்றில் ஊற்றி பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். இதுவே 'காலிஃபிளவர் சூப்' என்பது. உடம்புக்கு மிகவும் நல்லது.
|
தேவையான பொருள்கள்
|
| காலிஃபிளவர் |
1 பெரியது
|
வெங்காயம்
|
5 |
பச்சைமிளகாய்
|
5 |
தக்காளிப்பழம்
|
5 |
துவரம் பருப்பு
|
100 கிராம்
|
தேங்காய் மூடி
|
1 |
மிளகு
|
2 டீஸ்பூன்
|
சீரகம்
|
2 டீஸ்பூன்
|
சோம்பு
|
1 டீஸ்பூன்
|
கிராம்பு
|
4
|
பட்டை
|
சிறிது
|
| கறிவேப்பிலை |
சிறிது
|
கொத்தமல்லி
|
ஒரு கட்டு
|
இஞ்சி
|
ஒரு துண்டு
|
| கடுகு |
அரைஸ்பூன்
|
மஞ்சள் தூள்
|
ஒரு சிட்டிகை
|
நல்லெண்ணெய்
|
2 டீஸ்பூன்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|