|
முள்ளங்கி சட்னி
செய்முறை
முதலில் முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், மிளகாய்வற்றல் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பைப் போட்டு கிளறிக்கொண்டே இருக்கவும். கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும். எல்லாம் சிவக்க வறுபட்டதும் எடுத்து ஒரு தட்டில் கொட்டிக் கொண்டு, அதே வாணலியில் மீதியுள்ள எண்ணெயை ஊற்றி, பொடியாக நறுக்கி வைத்துள்ள முள்ளங்கி, வெங்காயம், தேங்காய்துருவல்களைப் போட்டு நன்றாக வதக்கிவிடவும். தக்காளிப்பழங்களையும் துண்டுகளாக்கிப் போடவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் ஆட்டுரலில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மிளகாய்வற்றல், உளுத்தம் பருப்பு, கடலைபருப்புகளையும் கொட்டி, அத்துடன் தேவையான உப்பு, புளி, சிறு துண்டு இஞ்சி ஆகியவற்றை சேர்த்து, நன்றாக மசிய ஆட்ட வேண்டும். பதமாக அரைத்ததும் பூண்டைப் போட்டு ஒரு ஆட்டு ஆட்டி, வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பெருங்காயம் இரண்டு துண்டு, போட்டு பொரிந்ததும், கடுகைப் போட்டு வெடித்ததும், கறிவேப்பிலையை உருவிப்போட்டு, முள்ளங்கிச் சட்னியை தாளித்து இறக்கிவிடவும். இந்தச் சட்னியை சோற்றில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
| பெருங்காயம் |
2 துண்டு
|
நாட்டு முள்ளங்கி
|
4
|
தக்காளிப்பழம்
|
2
|
புளி
|
சிறிது
|
வெங்காயம்
|
7
|
கடலை பருப்பு
|
1 டீஸ்பூன்
|
இஞ்சி
|
சிறு துண்டு
|
மிளகாய்வற்றல்
|
10
|
பூண்டு
|
1
|
கடலையெண்ணெய்
|
2 டீஸ்பூன் |
தேங்காய்த்துருவல்
|
5 டீஸ்பூன்
|
கறிவேப்பிலை
|
சிறு கொத்து
|
உப்பு
|
தேவையான அளவு
|
|