|
பாசிப்பருப்பு லட்டு
செய்முறை
வெல்லத்தை கம்பிப் பதத்தில் காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை பல் பல்லாக நறுக்கி வறுத்துக் கொள்ள வேண்டும். எள்ளையும் வறுத்து எடுத்துக் கொண்டு, இரண்டையும் காய்ச்சிய பாகில் கொட்டிக் கிளறிக் கொள்ளவும். ஏலக்காயைப் பொடியாகத் தட்டி பாகில் போடவும். பாசிப் பருப்பை எந்திரத்தில் கொடுத்து மாவாக அரைத்து அதில் சிறிது உப்பை சேர்த்து, காராபூந்தி பக்குவத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். டால்டா காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை பூந்தி போல பிழிந்து, நன்றாக வெந்ததும் எடுத்து ஒரு தாம்பாளத்தில் கொட்டிக் கொள்ளவும். இந்த பூந்தியை 2 அல்லது 3 பங்காகப் பிரித்து சிறிது சிறிதாகப் பாகைக் கலந்து, சிறிது நெய் விட்டு லட்டு போல் பிடிக்க வேண்டும். இதுவே பாசிப்பருப்பு லட்டு என்பது. பல நாள் கெடாமல் இருக்கும்.
|
தேவையான பொருள்கள்
|
பாசிப்பருப்பு
(தோல் நீக்கியது)
|
1/2 லிட்டர்
|
சுத்தமான வெல்லம்
|
750 கிராம்
|
ஏலக்காய்
|
10 |
தேங்காய்
|
ஒரு மூடி
|
எள்
|
ஒரு டீஸ்பூன்
|
டால்டா
|
500 மி.லி.
|
நெய்
|
25 கிராம்
|
|