|
சேனைக்கிழங்குப் புட்டு
செய்முறை
சேனைக்கிழங்கை மேல் தோல் சீவிவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை வேகவிடவும். அரை வேக்காடாக இருக்கும் போது எடுத்து ஆற வைக்கவும். ஆறிய பிறகு சேனைக் கிழங்கைத் துருவி வைத்துக் கொள்ளவும். தேங்காயையும் துருவி வைத்துக் கொள்ள வேண்டும். முந்திரிப்பருப்பை சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி, அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும், துருவி வைத்த தேங்காய், முந்திரிப்பருப்பு இவற்றைப்போட்டு, பொன்னிறமாக வந்ததும், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியைப் போடவும். அவை சிவந்து வரும் பொழுது, சேனைக்கிழங்கைப் போட்டு, வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறிவிடவும். எல்லாம் ஒன்றாக சிவந்து, நன்றாக வெந்ததும் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதுவே சேனைக் கிழங்கு புட்டு என்பது.
|
தேவையான பொருள்கள்
|
சேனைக்கிழங்கு
|
250 கிராம்
|
வெங்காயம்
|
100 கிராம்
|
தேங்காய்
|
ஒரு மூடி
|
| கசகசா |
1 டீஸ்பூன்
|
முந்திரிப்பருப்பு
|
10 |
மிளகாய்த்தூள்
|
2 டீஸ்பூன்
|
மஞ்சள்தூள்
|
1 சிட்டிகை
|
கறிவேப்பிலை
|
சிறிது
|
கொத்தமல்லி
|
சிறிது
|
நெய்
|
100 கிராம்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|