ஏலக்காயை நெய்யில் பொரித்து பொடி செய்து வைக்கவும். முந்திரிப் பருப்பை ஒன்றிரண்டாக உடைத்து, நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பாலில் ஆப்பிளைப் போட்டு வேக விடவும். வெந்ததும் இறக்கி ஆறவைக்கவும். ஆறிய பின் ஆப்பிளைக் கையால் ஓரளவுக்குப் பிசைந்துக் கொள்ள வேண்டும். (ரொம்பவும் கூழாகப் பிசைய வேண்டாம்).
பிறகு கோதுமை மாவைக் கலந்து கரைத்து அடுப்பில் வைக்கவும். கேசரிப்பவுடரையும் கலந்து கொள்ளவும். அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். கை விடாமல் கரண்டியால் கலவையைக் கிளறி விடவும். மாவு வெந்ததும், சர்க்கரையைக் கொட்டி கிளறவும். சர்க்கரை கரைந்ததும், நெய்யை ஊற்றவும். நன்றாகக் கெட்டிப்படும் வகையில் கிளற வேண்டும். அல்வா பதம் வந்து, கலவை சுருண்டதும் முந்திரிப் பருப்பையும் ஏலக்காயையும் போட்டுக் கிளறி இறக்கவும். நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி ஆறவிடவும். ஆறியபின் சாப்பிட சுவையாகவும், மணமாகவும் இருக்கும். இந்த ஆப்பிள் அல்வா உடம்புக்கு சத்தானதும் கூட.