|
ஆந்திரா தேங்காய்ப்பொடி
செய்முறை
தேங்காயை பூப்போல துருவிக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, காய்ந்ததும் தேங்காய்த் துருவலைப் போட்டு பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டவும். அதே வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்க வறுத்துக் கொண்டு, தேங்காய்த் துருவலுடன் கலந்து கொள்ளவும். மேலும் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்துக் கொண்டு, மறுபடி எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்துக் கொண்டு, எல்லாவற்றையும் வெயிலில் உலர்த்தி, தேங்காய்த் துருவலைத் தவிர மற்றவற்றை மிக்ஸியில் போட்டு, இத்துடன் உப்பு, புளி போட்டு இரண்டு சுற்று சுற்றி, பிறகு தேங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி, ஒன்றாகக் கலந்து வந்ததும், வழித்து எடுத்து ஒரு சீசாவில் போட்டு வைத்துக் கொள்ளவும். இட்லி, தோசை, இவற்றுக்கு தொட்டுச் சாப்பிட ஏற்றது. இந்தப் பொடி நீண்டநாள் கெடாது. இவற்றில் தண்ணீர் சேர்க்கக் கூடாது.
|
தேவையான பொருள்கள்
|
முற்றின தேங்காய்
|
2 |
மிளகாய்வற்றல்
|
25 |
புளி
|
எலுமிச்சை அளவு
|
பெருங்காயம்
|
ஒரு துண்டு
|
கடலைப் பருப்பு
|
2 மேசைக்கரண்டி
|
உளுத்தம் பருப்பு
|
2 மேசைக்கரண்டி
|
நல்லெண்ணெய்
|
3 தேக்கரண்டி
|
|