|
மசாலாப் பணியாரம்
செய்முறை
பச்சரிசி, உளுத்தம் பருப்பை சுத்தமான தண்ணீரில் களைந்து, கல் நீக்கி, சுமார் 2 மணி நேரம் ஊறவைத்து, ஆட்டுக் கல்லில் கெட்டியாக அரைக்க வேண்டும். நன்றாக அரைத்து வழித்து ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான உப்பை பொடி செய்துப் போட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் கொஞ்சம் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கறிவேப்பிலையை போட்டு வதக்கி, நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து, அத்துடன் பீன்ஸ், காரட் இவைகளை கழுவி பொடிமாஸ் கட்டையால் பொடிதாக சீவி மாவில் கொட்டவும். மிளகு, சீரகத்தை பொடி செய்து மாவில் போட்டு, நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பணியாரசட்டியை வைத்து எண்ணெய் ஊற்றவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் சுற்றிலும் விட்டு, பிசைந்து வைத்துள்ள மாவை அரைக்கரண்டி எடுத்து ஒரு குழியில் போட்டு மட்டமாக தட்டிவிடவும். இதே போல் ஒவ்வொரு பணியாரக் குழியிலும் மாவை அரைக் கரண்டி வீதம் மாவை விட்டு, சுற்றிலும் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு மூடிவிடவும். அடுப்பை நிதானமாக எரியவிடவும். ஐந்து நிமிடம் கழித்து, சிவக்க வெந்து விட்டதா என்று தட்டை திறந்து பார்த்து மறுபுறம் திருப்பிப் போடவும். ஒவ்வொரு பணியாரத்திற்கும் மறுபடி ஒவ்வொரு ஸ்பூன் எண்ணெய் விடவும். மறுபுறம் சிவந்து விட்டதா என்று பார்த்து எல்லாப் பணியாரங்களையும் எடுத்துவிடவும். இதுவே மசாலாப் பணியாரம்.
|
தேவையான பொருள்கள்
|
பீன்ஸ்
|
100 கிராம்
|
பச்சரிசி
|
200 கிராம்
|
உளுத்தம் பருப்பு
|
200 கிராம்
|
வெங்காயம்
|
200 கிராம்
|
பச்சை மிளகாய்
|
10 |
கறிவேப்பிலை
|
சிறு கொத்து
|
கடுகு
|
ஒரு டீஸ்பூன்
|
| நல்லெண்ணெய் |
200 மி.லி.
|
காரட்
|
100 கிராம்
|
மிளகு
|
2 டீஸ்பூன்
|
| சீரகம் |
2 டீஸ்பூன்
|
| உப்பு |
தேவையான அளவு
|
|