|
பால்பர்பி
செய்முறை
முதலில் தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும். சிறிது நெய்யை வாணலியில் விட்டு, பாதாம் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் சீனியைக் கொட்டி அடுப்பில் வைக்கவும். சீனிக் கரைந்து பாகாகக் கொதித்து வரும். பாகு கம்பி பதத்தில் வரும் பொழுது துருவி வைத்துள்ள தேங்காயைக் கொட்டி கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். வறுத்து வைத்துள்ள பாதாம் பருப்பு, நெய் முழுவதையும் ஊற்றி, அடிபிடிக்காமல் கிளறிவிட வேண்டும். பதமாக வந்ததும், இறக்கி, நெய் தடவிய தாம்பாளத்தில் பரப்பி, கேக்குகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதுவே பால்பர்பி.
|
தேவையான பொருள்கள்
|
| தேங்காய் |
1 |
பால்
|
500 மி.லி.
|
| சீனி |
500 கிராம்
|
நெய்
|
5 பலம் |
பாதாம் பருப்பு
|
10 |
|