|
புழுங்கல் அரிசி அதிரசம்
செய்முறை
புழுங்கல் அரிசியை கல் நீக்கி, சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு, பாலை ஊற்றி ஊறவிட வேண்டும். மறுநாள் ஆட்டுரலில் வெண்ணை போல் அரைத்துக் கொள்ள வேண்டும். சீனியை இடித்து, அத்துடன் ஏலக்காயைப் தட்டிப் போட்டு, ஒரு பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடைப் போலத் தட்டிப் போடவும். வடையின் இருபுறமும் சிவக்க வெந்ததும் எடுத்து ஒரு தட்டில் வைக்கவும். அதன் இருபுறமும் சீனியைத் தூவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். இதுவே பூழுங்கல் அரிசி அதிரசம்.
|
தேவையான பொருள்கள்
|
புழுங்கல் அரிசி
|
200 கிராம் |
பால்
|
150 மி.லி.
|
சீனி
|
300 கிராம் |
நல்லெண்ணெய்
|
200 கிராம் |
ஏலக்காய்
|
7 |
|