|
உப்புமா வடை
செய்முறை
பருப்பு வகைகளை ஊறப்போடவும். தேங்காயைத் துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், இஞ்சி இவைகளைப் பொடியாக அரிந்து கொள்ளவும். பருப்பு நன்றாக ஊறியதும் அரைக்கவும். அத்துடன் மிளகாய்வற்றல், சிறு துண்டு பெருங்காயம், துருவிய தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். நன்றாக அரைத்த மாவை வழித்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போடவும். கடுகு பொரிந்ததும், நறுக்கின இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, அத்துடன் கறிவேப்பிலையை உருவிப் போட்டு, வதக்கி, அரைத்து வைத்துள்ள கலவையை அதில் போட்டு, தேவையான அளவு உப்புப் போட்டு, அரிசிரவையையும் போட்டு நன்குவதக்கி, 10 நிமிடம் கழித்து இறக்கி, வைத்துக் கொள்ளவும். ஒரு அடைக் கல்லை அடுப்பில் வைக்கவும். கல் காய்ந்ததும், மொத்தமாக உள்ள மாவில் சிறிது எடுத்து சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போடவேண்டும். ஒரு தடவைக்கு 5 வடைகள் போடவும். வடைகளைச் சுற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும். வடையின் இருபுறமும் சிவக்க வெந்தபின் எடுத்திடவும்.
|
தேவையான பொருள்கள்
|
மிஷினில் உடைத்த
அரிசி ரவை
|
300 கிராம்
|
கடலை பருப்பு
|
100 கிராம்
|
உளுத்தம் பருப்பு
|
100 கிராம்
|
துவரம் பருப்பு
|
100 கிராம்
|
தேங்காய் மூடி (பெரியது)
|
ஒன்று
|
பச்சை மிளகாய்
|
6 |
இஞ்சி
|
1 துண்டு
|
மிளகாய் வற்றல்
|
5 |
கறிவேப்பிலை
|
2 கொத்து
|
நல்லெண்ணெய்
|
200 கிராம்
|
கடுகு
|
ஒரு டீஸ்பூன்
|
உப்பு
|
தேவையான அளவு
|
|