|
இட்லி பட்டாணிபாத்
செய்முறை
முதலில் இட்லிகளை பொடியாகப் பிசைந்து கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி இவைகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைக்கவும். நெய் காய்ந்ததும், பட்டை இலவங்கம், பிரிஞ்சி இலை, சோம்பு, ஏலக்காய், முந்திரி பருப்பு ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அத்துடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, பட்டாணி ஆகியவற்றைப் போட்டு நெய் ஊற்றி, நன்றாக வதக்க வேண்டும். வதங்கியபின், ஒரு ஆழாக்கு தண்ணீர் விட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு போட்டு, மூடிவைக்கவும். பட்டாணி நன்றாக வெந்ததும் தண்ணீர் சுண்டியதும், பொடியாக பிசைந்து வைத்துள்ள இட்லியைப் போட்டு நன்றாகக் கிளறிவிட்டு, வாணலியை கீழே இறக்கி, வைத்துக் கொள்ளவும். சிறிது நேரம் கழித்து எலுமிச்சம் பழத்தின் சாறைப் பிழிந்து ஊற்றவும். மறுபடியும் ஒரு கிளறுகிளறி சூடாகப் பறிமாறவும்.
|
தேவையான பொருள்கள் |
| இட்லி |
10 |
பச்சை மிளகாய்
|
6 |
வெங்காயம்
|
6 |
பூண்டு
|
1 |
இஞ்சி
|
ஒரு துண்டு
|
மிளகாய்த் தூள்
|
1 டீஸ்பூன்
|
மஞ்சள் தூள்
|
1/4 டீஸ்பூன்
|
பச்சைப் பட்டாணி
|
50 கிராம் |
முந்திரிப் பருப்பு
|
20 |
பிரிஞ்சி இலை
|
சிறிது |
பட்டை
|
ஒரு துண்டு
|
| இலவங்கம் |
3 |
| ஏலக்காய் |
2 |
| சோம்பு |
சிறிது
|
எலுமிச்சம்பழம்
|
பாதி |
| உப்பு |
தேவையான அளவு
|
|