புத்தகத்தின் பெயர் : சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள்! |
விலை : ரூ.50 |
எழுத்தாளர் : சபீதா ஜோசப் |
பதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600014. தொலைபேசி: 28485943 |
மக்களிடையே, மக்கள் மனதில் சூப்பர் ஸ்டார் ஆக நிலைத்து இருப்பது ஒரே ஒருவர் மட்டுமே அவர் ரஜினிகாந்த் தான். நான் சொன்னதை தான் செய்வேன், செய்வதை தான் சொல்வேன் என்று வாழ்ந்து கொண்டு இருப்பவர். அவர் கூறிய சில அறிவுரை கதைகளை மிகவும் எளிமையாக படைத்துள்ளார் சபீதா ஜோசப். இந்நூலில் சபீதா ஜோசப் ரஜினியின் வாழ்க்கை, அவர் எப்படி நடிக்க வந்தார், அவர் விருப்பம் அனைத்தையும் ரஜினியிடம் இருந்தே பதில்களாக பெற்று தொகுத்து வழங்கியுள்ளார்.
ஒரு மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்று ரஜினி கூறுவதை மிகவும் வசிகரமாக எழுதியுள்ளார் எழுத்தாளர். மொத்தத்தில் இந்நூல் ரசிகர்களுக்கு ஒரு கையேடு.
- தேன்மொழி.
|