புத்தகத்தின் பெயர் : சினிமா ஆசையில் சீரழிந்த பெண்கள் |
விலை : ரூ.25 |
எழுத்தாளர் : ஜெ.பிஸ்மி |
பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
106/4, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943.
Contact: support@nakkheeran.in |
மக்களின் மனம் கவர்ந்த ஊடகமான சினிமாவின் ஏதாவது ஒரு அங்கமாக மாறி, மக்களின் பாராட்டுகளையும் செல்வச்செழிப்பையும் அடையத் துடிப்போரில் அதிகம் பாதிக்கப்படுவது இளம் பெண்கள்.
சிம்ரன், ஜோதிகா, திரிஷாக்களாக மாற நினைப்பவர்களில் 90 சதவிகிதம் இளம்பெண்கள் சந்திக்கிற இழப்புகள் கண்ணீர்க் காவியங்கள்!
கோடம்பாக்கம் கணவுத் தொழிற்சாலையில் கற்பு காணிக்கை செலுத்தாமல், நட்சத்திரக் கனவுகள் 95 சதவிகிதம் பேருக்குச் சாத்தியமாவதே இல்லை என்பதே கசப்பான நிஜம்! அப்படி சினிமாவுக்காக ஆசைப்பட்டு சீரழிந்து போன சில தேவதைகளின் கண்ணீர்க் கதைகளின் தொகுப்பே இந்நூல்!
சினிமா- ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி அது 999 பேர் தலையை வாங்கி ஒருவருக்கு மகுடம் சூட்டும் மாயாபஜார். அந்த மாதிரி மகுடம் சூட்டப்பட்ட ஒரு தலையைப் பார்த்துவிட்டு, தலையைக் கொடுத்து வீழ்ந்து போகக்கூடாது என்று என்று எச்சரிக்க வைப்பதே இந்த நூலின் மையக் கருத்து படித்துப் பார்த்தால் பாடம் பெறுவீர்கள். இது நிச்சயம்! |