புத்தகத்தின் பெயர் : முயற்சி திருவினையாக்கும் |
விலை : ரூ.15 |
எழுத்தாளர் : திரு.எம்.சரவணன் |
பதிப்பகம் : ஏ.வி.எம்.புரொடக்ஷன்ஸ்
|
ஏவி.எம். என்னும் மிகப்பெரிய, அரிய, ஸ்டுடியோ திரு.ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் அவர்களுக்குப் பின் மிகவும் திறமையாக நடத்தி வருபவர்கள் அவருடைய புதல்வர்கள் ஏ.வி.எம் சகோதரர்கள் ஆவர். அவர்களின் திரு ஏ.வி.எம்.சரவணன் அவர்கள் இயற்றிய நூல்தான் முயற்சி திருவினையாக்கும்’ என்னும் இந்நூல்.
திரு.எம்.சரவணன் அவர்கள் தம் தந்தையாராகிய திரு.ஏ.வி.மெய்யப்ப செட்டியாருடன் உடனிருந்து பல விஷயங்களைக் கற்றவர். திரைப்பட விஷயங்களுக்கும் சரி. நல்லொழுக்கமும் சரி. இவற்றில் நிறைகுடமாத் திகழ்பவர் திரு,எம்.சரவணன் அவர்கள்.
திரையுலகைச் சார்ந்த பல செய்திகளை சுவை குன்றாமல் இந்நூலில் கூறியுள்ளார். இந்நூல் படிப்பதற்கு சுவையாகவும், பயன்படுத்துவதற்கு இனிமையாகவும் திகழ்கிறது. இந்நூலை ஏ.வி.எம்.புரொடக்ஷன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.15.
|