புத்தகத்தின் பெயர் : காலத்தை வென்ற திரைப்படக் கலை |
விலை : ரூ.65 |
எழுத்தாளர் : ஜெகாதா |
பதிப்பகம் : செண்பகா பதிப்பகம்
சென்னை - 600 017.
தொலைபேசி : 24331510. |
திரைப்படம் என்பது 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கி இன்று மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்து தவிர்க்க இயலாத ஊடகமாக மாறிவிட்டது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் - சினிமா ஒவ்வொரு வீட்டிலும் படுக்கையறை வரை வந்துவிட்ட சாதனமாக விளங்குகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் அரசியல் மற்றும் சமூகப் போக்குகளைக் கூடத் தீர்மானிக்கும் ஊடகமாகிவிட்ட இந்த சினிமாவைப் பற்றி அதன் ஆரம்பம், வளர்ச்சி மற்றும் அதன் சாதனைகள் - அதனால் வளர்ந்து செழித்த கலைஞர்கள் மற்றும் சினிமாவால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒரு வரலாறு போல் ஆசிரியர் ஜெகாதா இந்நூலில் விளக்கியுள்ளார் - சினிமாவைத் தெரிந்து கொள்ள அதைப் புரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்நூல் கையேடுபோல் உதவும் என்று நம்புகிறோம். |