புத்தகத்தின் பெயர் : இருபதாம் நூற்றாண்டின் இந்திய சினிமா |
விலை : ரூ.40 |
எழுத்தாளர் : ஜெகாதா |
பதிப்பகம் : ராம்பிரசந்த் பப்ளிகேஷன்ஸ்,
105, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை,
சென்னை - 600 014.
தொலைபேசி : 28485943.
Contact: support@nakkheeran.in |
எழுத்தாளர் ஜெகாதாவின் எழுத்து முற்போக்கு மோகம் கொண்டது. இருப்பதை பழிப்பதே முற்போக்கு என்றில்லாமல், நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளையும் மனித உணர்வுகளையும் பல கோணத்தில் பரிசீலித்து, சமுதாயப் பொறுப்புணர்ந்து, அதன் வளர்ச்சிக்குத் தன் கருத்துக்களால் வலுச்சேர்க்கிற முற்போக்கு மனம் கொண்டவர்.
சிறுகதை மன்னன் ஜெயகாந்தனைத் தனது எழுத்துப் பணியின் ஆதர்ஷமாகக் கொண்டு, அவர் எழுத்துக்களின் மீது காதல் கொண்டு, ஜெயகாந்ததாசனாகி, தனது பெயரையே அதன் சுருக்கமாக ஜெகாதா என்று மாற்றிக் கொண்டவர்!
சிறுகதை, நாவல், கவிதை, சினிமா, வரலாறு, ஆன்மிக ஆய்வு என்று பல துறைகள் பற்றியும் 85 நூல்கள் எழுதி இருக்கிறார்.
'இருபதாம் நூற்றாண்டின் இந்திய சினிமா' என்ற இந்த நூல் இந்திய திரைப்பட வரலாற்றின் தொகுப்பு என்றே சொல்லலாம்.
அருமையான முயற்சி! |