ஜனவரி 2003 |
3-1-2003
- சேனா படத்திற்காக மீனா தன் சொந்த குரலில் பாடினார். சினிமாவிற்காக இவர் பாடிய முதல் பாடல் இதுதான்.
|
5-1-2003
- தங்கள் பட விளம்பரங்களை ஒளிபரப்ப வசதியாக தனி சேனல் துவங்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்தது.
|
9-1-2003
- திருட்டு வி.சி.டி-யை ஒழிக்கக் போட்டோ தமிழ் சினிமா கூட்டமைப்பினர் சுங்க இலாகா அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். பின்பு சுங்க இலாகா கமிஷ்னர் ஸ்ரீதரனிடம் திருட்டு வி.சி.டி-யை தடுக்கக் போட்டோ மனு ஒன்றையும் கொடுத்தனர்.
- தமிழக அரசு மானியம் வழங்குவதற்காக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ் சினிமா படங்களை தேர்வு செய்ய நீதிபதி எ.ராமன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம், சி.ஆர்.சரஸ்வதி, இயக்குனர் ஆர்.வி..உதயகுமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
|
16-1-2003
- தீவிரவாதிகளின் கொலைப் பட்டியலில் இயக்குனர் மணிரத்னத்தின் பெயர் இருப்பதாக மும்பை காவல்துறை எச்சரித்தது.
- பொங்கலை முன்னிட்டு, நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக கலைநிகழ்ச்சியின் மூலம் திரட்டிய பணத்தில், (கடன் அடைத்தது போக மீதம் இருந்த பணத்தில்) நலிவுற்ற 500 கலைஞர்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது. அடுத்த வருடத்திலிருந்து 1000 பேருக்கு வேட்டி சேலையும், நலிவுற்ற கலைஞர்களுக்கு 300 ரூபாய் பென்ஷன் தொகையும் வழங்கப்பட இருப்பதாக சங்கத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
|
19-1-2003
- 2002-ம் ஆண்டின் சிறந்த படமாக அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களை தமிழ்நாடு முற்போக்கு ஏழுத்தாளர் சங்கம் தேர்வு செய்தது.
|
26-1-2003
- ஆண்டிற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜன், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை சுகுமாரி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
|
28-1-2003
- முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் வடிவேலு முதல்வர் ஜெயலலிதாவை போட்டோல் சந்தித்து ஒரு லட்சம் நன்கொடை வழங்கினார்.
|
30-1-2003
- நெய்வேலி போராட்டத்தில் பணம் வாங்கிக் கொண்டு கலந்து கொண்டார் என்று இயக்குனர் பாரதிராஜா மேல் ராதிகா குற்றம் சுமத்தியிருந்தார். இதையடுத்து பாரதிராஜாவின் உதவியாளர் ராதிகா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணைக்காக கோர்ட்டில் ஆஜரானார் ராதிகா.
|