பிரகாஷ்ராஜ் தயாரிக்கும் தோணி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில்
நடந்தது. விழா நடந்த இடம் கோட்டூர்புரம் அண்ணா நு£லகம். சமீபகாலமாக தமிழ்சினிமா ஏரியாவிலேயே தென்படாத பிரகாஷ்ராஜ், பல நாள் கழித்து வந்த சந்தோஷத்தில் உற்சாகமாகவே அங்கும் இங்கும் நடைபோட்டுக் கொண்டிருந்தார். அவரது உற்சாகத்தை சற்றே நடுக்கமுற வைத்தார் இயக்குனர் சிகரம் பாலசந்தர்.
அந்த விழாவில் அவர் பேசியது அப்படியே இங்கே.
பிரகாஷ்ராஜை சில சமயங்களில் எனக்கும் பிடிக்கும் பல சமயங்களில் எனக்கு பிடிக்காது. என்ன இப்படி பண்றான்? இது தப்பில்லையா..? என அடிக்கடி அவனைப்பற்றி யோசிப்பேன். இப்பொழுது கூட நிறைய தவறுகள் செய்து கொண்டிருக்கிறான்.அவையெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை! ஆனாலும் அவனது திறைமையை மதித்து நான் வாழ்த்த வந்திருக்கிறேன்ஞ்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் பிரகாஷ், படப்பிடிப்பு காலை 6 மணிக்கு என்றால் 10 மணிக்கு வருவதும், சில சமயங்களில் வராமலே போவதையும் கேள்விப்பட்டு எனக்கு கோபம்,கோபமாக வரும்! என்னிடம் இன்னமும் பணிவாகத்தான் இருக்கிறான். அவன் பீக்கில் இருந்தபோது அவனை எனது டி.வி., சீரியலில் நான் நடிக்க வைத்ததை பார்த்து பலரும் பலவாறாக டி.வி சீரியலில் நடிக்காதே என அவனிடம் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு அவன், "அவர் என் குருநாதர்., அவர் மேலே இருந்து கீழே குதி என்றால் நான் குதிப்பேன்" என்று அவன் சொல்லியிருக்கிறான். இதை நான் கேள்விப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை! அதே நேரம் பிற தவறுகளையும் அவன் திருத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
குருநாதர் சொல்லை அப்படியே பின்பற்றும் பிரகாஷ்ராஜ் இதன் பிறகு எப்படி நடந்து கொள்வாரோ? அந்த குருநாதருக்கே வெளிச்சம்.