சாஃப்ட்வியூ ஊடக கல்லூரியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில்
கலந்துகொண்ட இயக்குனர் சிம்பு தேவன் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது பேசியதாவது ;-
சினிமாவில் இயக்குனராக ஆவதற்கு முன்பு கார்ட்டூனிஸ்டாக இருந்து பின்பு இயக்குனராக ஆனேன். எனக்கு விருப்பமான துறையில் முதலில் கால்பதிக்க விரும்பியதே இதற்கு காரணமாகும். மற்ற எந்த துறையை விட சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வர போராட வேண்டும். ஆர்வமும் அதற்கு தகுந்த மாதிரியான தேடல் மிகவும் முக்கியம், தேடல் தான் நீங்க ஆசைப்பட்டதை நிறைவேற்றும் .
சினிமாவில் இருக்கும் கேமரா, ஆர்ட் டிப்பார்ட்மெண்ட் போல பல்வேறு துறையினருக்கும் உங்களுக்குமான புரிதல் சரியாக இருக்கும் பட்சத்தில் தான் ஒரு நல்ல படைப்பு வெளிவரும்.
இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் போன்ற படங்கள் மூலம் எனக்கென ஒரு அடையாளம் உள்ளது . அடுத்தடுத்த படங்கள் அந்த பெயரை காப்பாற்றும்.
-தாஸ்..,