ஒரு படத்துக்கு இரண்டு தயாரிப்பாளர்கள் இருந்தாலே கருத்து வேறுபாடு
ஏற்படக்கூடிய இந்தக்காலத்தில் 5000 பேர் சேர்ந்து ஒரு படத்தை தயாரித்தால் எப்படி இருக்கும்.அது 'முயல்' போல இருக்கும்.
வீஜே.வான முரளி நாயகனாக அவருடன் காதல் சரண்யா கைகோர்க்கும் முயல் படத்தை 'சனிக்கிழமை சாயந்திரம் அஞ்சு மணி' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.பி.எஸ்.குகன் இயக்குகிறார். அடிப்படையில் ஒளிப்பதிவாளரான குகன் தனது ஒளிப்பதிவாள நண்பர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி 'முயல்' படம் தயாரிக்க மேற்கொண்ட இந்த முயற்சி கண்டிப்பாக கின்னஸ் சாதனையில் இடம் பெறும் என்று நம்புகிறார்.
கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆடித் தீர்க்கும் மூன்று நண்பர்கள், படிப்பு முடிந்ததும் பிஸினஸ் என்று இறங்கும்போது, ஒரு எதிர்பாராத பிரச்சினையை சந்திக்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப்போடுகிறது' என்பதைத்தான் 'முயல்' படத்தில் சொல்ல முயல்கிறேன். என்னை நம்பிப்பணம் போட்ட 5000 நண்பர்களுக்கும் சிறிய லாபம் வைத்தாவது திருப்பித்தர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்' என்கிறார்