மணிரத்னம் இயக்கும் படத்திற்கு 'கடல்' என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதும்,
கார்த்திக் மகன் கௌதம் நாயகனாக நடிப்பதும் உறுதியாகிவிட்டது. போகட்டும். இப்படத்தில் கதாநாயகி சமந்தாவுக்கு அப்பாவாக அரவிந்த்சாமி நடிக்கப் போகிறார் என்று கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக ஒரு தகவல் சுழன்றடித்து வந்தது. மணிரத்னம் தரப்பு இதை உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை.
இது போதாதா, கோடம்பாக்கத்தின் புதிய அப்பா நடிகராக அரவிந்த்சாமியை பத்திரிகைகள் சித்தரிக்கத் தொடங்கிவிட்டன. இதற்கு முன்னால் விஷால் படத்தில் தான் நடிக்கப் போவதாக வெளியான தகவலை நாசூக்காக மறுத்தார் அரவிந்த்சாமி.
ஆனால் அப்பா வேடத்தில் நடிக்கப் போவதாக வெளியான புதிய தகவலைக் கண்டு அவர் கொதித்துப் போய்விட்டாராம்.
"அப்பா வேடத்தில் நடிக்கும் அளவிற்கு நான் கிழவனாகிவிட்டேனா? இப்படியெல்லாம் குருட்டுத்தனமாக யோசிக்க சிலரால் எப்படி முடிகிறது? நான் எந்த வேடத்திலும் நடிப்பதாக இல்லை. மணிரத்னம் என்னை அணுகவில்லை. ஒருவேளை அவரே கேட்டிருந்தாலும் நடித்திருக்க மாட்டேன்" என்று தனது ப்ளாக் பக்கத்தில் பொரிந்து தள்ளியுள்ள அரவிந்த்சாமி நடிப்பைக் கைவிட்டு தொழிலதிபராக மாறிவிட்ட தனக்கு இனி தொழில்களைக் கவனிப்பதுதான் முதலும் கடைசியுமான வேலை என்றும் கூறியுள்ளார்.
'ரோஜா' நாயகனை இப்படி வாட வைக்கலாமா?