|
வடை தட்டி விக்கிற பிசினஸ்சா இருந்தாலும் அதில் வட்டி செலவு தனியா, வடை செலவு தனியான்னு கணக்கு பார்த்தால்தான் வியாபாரம் நிலைக்கும். இந்த வரவு செலவு கணக்கை கொஞ்சம் லேட்டாகதான் பார்த்திருக்கிறார் ஷங்கர்.
ஒரு பக்கம் இமய மலையை கட்டி இழுத்துட்டு வர்ற மாதிரி 'எந்திரன்' வேலைகளில் பிசியா இருந்தாலும், தன்னுடைய எஸ் பிக்சர்ஸ் சார்பாக படம் தயாரித்த வகையில் சம்பாதித்தது என்ன என்று கணக்கு போட்டாராம். பேரும் புகழும் தந்தாலும் அஸ்திவாரத்தை ஆட வைச்சிட்டாங்களே என்று அதிர வைத்ததாம் கணக்கு. சுமார் ஒன்பது கோடி நஷ்டம். அதுவும் முக்கியமான மூன்று படங்களில்!
இனிமேலும் கம்பெனியை தொடர வேண்டுமா என்ற முடிவுக்கு வந்த ஷங்கர், அனந்தபுரத்து வீட்டோடு கம்பெனிக்கு பூட்டு போடுவதாக முடிவெடுத்திருக்கிறாராம். அவசரம் வேண்டாம் என்று அட்வைசிக்கிற அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்லை என்பதால் பூட்டும் சாவியும் தயாராகிக் கொண்டிருக்கிறது எஸ் பிக்சர்சுக்கு! |