|
பாலீஷ் போட்ட பல்லா இருந்தாலும், பளிச்சுன்னு சிரிச்சாதானே தெரியும்? அதனால் பாலீஷ்ஷா சொல்ல வேண்டிய மேட்டரை பளிச்சுன்னே சொல்லிடுறோம்.
வா வான்னு கூப்பிடும்போதெல்லாம் வராத பரத், வந்திட்டாரேப்பான்னு ஓடும்போது வாசலை மறைச்சு நின்னாராம். அந்த கதைதான் இது. கூடல் நகர் என்ற படத்தை எடுத்து பெரும் அவஸ்தைகுள்ளான கம்பெனிக்கு திடீரென்று ஒருநாள் வந்து நின்றார் பரத். அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்கள் வாங்க என்று ஒற்றை வார்த்தையில் வரவேற்றார்கள். ரொம்ப நாளா என் கால்ஷீட் வேணும்னு கேட்டுக்கிட்டே இருந்தீங்க. எப்போ வேணும் சொல்லுங்க என்றாராம் சின்ன தளபதி.
இவர்கள் கால்ஷீட் கேட்டது கூடல் நகர் ரிலீஸ் ஆகி ஓடாமல் போன கொஞ்ச நாட்களுக்குள்ளாக. அப்போதெல்லாம் பிறகு பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்த பரத், தம்பிக்கு இந்த ஊரு தோல்விக்கு பிறகு வந்து நின்றதால் ஆடிப்போனார்களாம் அந்த இரட்டை தயாரிப்பாளர்கள்.
ஆனாலும் பாலீஷ்ஷாக பதில் சொல்லி அனுப்பினார்களாம். முன் வாசலே இல்லையாம். இதில எங்க முறவாசல் செய்யுறது? |