|
ஒருகாலத்தில் சிக்கன் மட்டன் துவங்கி தேள் பூரான் வரைக்கும் ஒரு கை (சோத்தாங்கை) பார்த்தவர் கவுண்டமணி. ஆனால் சமீபகாலமாக அசைவ ஐட்டங்களுக்கு நோ. திரவ ஐட்டங்களுக்கு நோ நோ என்று கட்டுப்பாடு காக்கிறார். ஆனாலும் கடந்த சில தினங்களாக தன்னை பற்றி வரும் செய்திகளை அவரே விரும்பவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
வேறொன்னுமில்லப்பா. இந்த கழுத்து வலின்னு ஆசுபத்திரிக்கு போனேன். அங்க என்னவோ பார்க்குறேன்னு கழுத்த நோண்டிட்டானுங்கப்பா. வலி தாங்கல. அப்படியே அங்கனையே ஒரு ரெஸ்ட் போடலாம்னு நினைச்சா நெஞ்சு வலி, சீரியஸ்னு இந்த பத்திரிகைகாரனுங்க கதைய முடிக்க பாக்குறானுங்கப்பா... கவுண்டரின் அலுப்பு சலிப்புதான் இது.
மருத்துவமனையிலிருந்து இன்னும் வீடு திரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு வியாழனன்றும் ஈசிஆர் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு செல்கிற வழக்கம் உள்ளவர் அவர். இந்த வியாழக்கிழமையும் கோயிலுக்கு போக வேண்டும் என்பதால், வுடுங்கப்பா.... போயிட்டு வந்திர்றேன் என்ற இப்போதிலிருந்தே படுத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.
ஆணானப்பட்ட கவுண்டருக்குள்ளேயே ஆன்மீக ஜோதி எரியுதேப்பா...
|