|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
கூடங்குளம் அணுஉலை பிரச்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கைது - தயாநிதியை பிரதமர் பதவி விலகச் சொல்ல வேண்டும் : ஜெயலலிதா - ஆப்ரிக்க நாடுகளில் ஹிலாரி சுற்றுப்பயணம் - கனிமொழி ஜாமீன் மனு மீது 3ந் தேதி தீர்ப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் உயிர் தப்பினார்
மீடியாவே, காயப்படுத்தாதே ப்ளீஸ்...
-நடிகை ரஞ்சிதா கெஞ்சல்!

பெருத்த முயற்சிகளுக்குப்பின் குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு சிக்கிவிட்டார் ரஞ்சிதா. டிவிடி சதிக்கு பின்னால் இவரும் இருக்கிறார் என்று மக்கள் சந்தேகப்படுகிற இந்த நேரத்தில் ரஞ்சிதா அளித்திருக்கும் பேட்டி சிக்கனமாக இருந்தாலும், சிக்கை அவிழ்த்திருக்கிறது.

என்னை பற்றி, என்னை வளர்த்துவிட்ட தமிழ் மீடியாவே ரொம்ப கேவலப்படுத்திக் கொண்டிருப்பது நியாயம்தானா? நான் நல்ல குடும்பத்து பெண். தென்னிந்திய சினிமாவில் கொடி கட்டி பறந்தவள். ஏதோ பணத்துக்காக அந்த வீடியோவை நான்தான் எடுத்தது போல மீடியாக்கள் சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. இது ஊருக்கே தெரியும். அவரது சொற்பொழிவுகளாலும், கருத்துக்களாலும் கவரப்பட்டவள் நான். அது மட்டுமல்ல, சிறுவயது முதல் என்னை பாடாய் படுத்திக்கொண்டிருந்த வீஸிங் பிரச்சனையை ஒரே நாளில் அவர் சரி செய்துவிட்டார். அன்று முதல் நான் அவரது பக்தை ஆகிவிட்டேன். காலை பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் ஒரு பணிவிடைதான். அதில் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

நித்யானந்தா மகாஞானி. அவரே இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். ப்ளீஸ்...

இவ்வாறு அந்த பேட்டியில் பேசியிருக்கிறார் ரஞ்சிதா.

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter