|
ஏர்செல் விளம்பரத்திற்காக சென்னை வந்திருக்கிறார் கிரிக்கெட் பிளேயர் தோனி. இவருடன் இன்னும் சில கிரிக்கெட் வீரர்களும் வந்திருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற படப்பிடிப்புகள் எந்த தொந்தரவும் இல்லாத ஸ்டுடியோக்களில் படமாக்கப்படும். அல்லது ஏக கெடுபிடிகளுடன் அவுட்டோரில் நடக்கும். ஆனால் ஆச்சர்யமாக சென்னையில் உள்ள பிரபலமான ஐந்து நட்சத்திர ஓட்டலில் வைத்திருக்கிறார்கள் ஷ§ட்டிங்கை. அடையாறில் அமைந்திருக்கும் இந்த ஓட்டலுக்கு கிரிக்கெட் வீரர்கள் வருவது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரிய ஹாலில் க்ரீன் மேட் பொறுத்தப்பட்டு படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தோனி சென்னைக்கு வந்திருக்கும் தகவல் அறிந்து கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் இருந்த லட்சுமிராய் அவசரம் அவசரமாக சென்னைக்கு திரும்பியிருக்கிறார்.
வேதனை என்னவென்றால் இந்த சென்னை ட்ரிப் லட்சுமிராய்க்கு சொல்லப்படவில்லையாம். ஆனாலும் எப்படியோ விஷயத்தை கேள்வியுற்றுதான் பறந்தோடி வந்திருக்கிறது கிளி. அவர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டாரா? அல்லது செக்யூரிடி காரணமாக தடுக்கப்பட்டாரா என்பது சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். |