|
டிசம்பர் 31 ந் தேதிதான் தமிழ் வருடக்கணக்குப்படி மார்கழி 16. இதையே தலைப்பாக வைத்து ஒரு படம் உருவாகி வருகிறது. ஏ.வெங்கடேஷிடம் பதிமூன்று படங்களில் பணியாற்றிய கே.ஸ்டீபன் இயக்குகிறார்.
இவருக்கு சொந்த ஊர் து£த்துக்குடி. இந்த படத்தின் கதையும் அங்கேயே நடக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் ப்ளவர் ராஜ்குமாருக்கு கூட இதே து£த்துக்குடிதான். இவருக்கு படம் எடுக்கிற ஐடியாவே இல்லை. கதைய கேளுங்க. பிடிச்சிருந்தா பண்ணுங்க என்றுதான் கதை சொல்ல ஆரம்பித்தேன். அப்புறம் பரபரப்பா ஆரம்பிச்சு படத்தையே முடிச்சிட்டோம் என்றார் ஸ்டீபன்.
கதைய கேளுங்க. பிடிச்சிருந்தா... என்ற இதே அப்ரோச்சை ஸ்டீபன் இன்னொரு இடத்திலும் கையாண்டிருக்கிறார். படத்தின் ஹீரோ ஜெயந்த் பிரபல ஹீரோ பானுசந்தரின் மகன். அவரிடம் கால்ஷீட் கேட்டு போயிருந்தாராம். என் பையனை இப்போ நடிக்க வைக்கிற ஐடியா இல்லை என்றாராம் பானுசந்தர். அவரிடம், கதைய கேளுங்க. பிடிச்சிருந்தா நடிக்க வைங்க என்று சொல்லியதுடன், அவரை மிரள வைத்து கையோடு கால்ஷீட்டையும் வாங்கி வந்துவிட்டார் ஸ்டீபன்.
து£த்துக்குடி மண்வாசனைக்கு இவரது அழகான கலரும், முகமும் ஒத்துவருமா என்றால், நீங்க படத்தை பார்க்கதானே போறீங்க? பார்த்துட்டு கேளுங்க என்றார் நம்பிக்கையோடு. கதாநாயகியை கேரளாவில் இருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். அங்கு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீநிதிதான் மார்கழி 16 ன் ஹீரோயின்.
நேரில் பார்த்தால் நமக்கே குளிரடிக்கிறது. அதுவும் மார்கழி குளிர்!
|