|
ஏ.வெங்கடேஷின் அடுத்த குண்டு 'வவ்வால் கோட்டை'. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் மட்டுமல்ல, படம் கூட எடுக்க முடியாது வெங்கடேஷால். இவரை ஆக்ஷன் பட இயக்குனர் என்று ஆர்டினரியாக சொல்லிவிடவும் முடியாது. ஏனென்றால் அறிமுகமாகி பல வருடங்கள் கழித்து அருண் விஜய் என்ற நடிகரை மார்க்கெட்டில் ஸ்டடியாக்கிய பெருமை வெங்கடேஷ§க்கு மட்டுமே உண்டு.
சரி விஷயத்துக்கு வருவோம். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஹரிப்ரியா. இவர் கனகவேல் காக்க படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர். அடிப்படையில் கன்னட நடிகையான இவர், தமிழில் சிம்மாசனம் வேண்டாம். ஒரு மர நாற்காலியாவது கிடைக்காதா என்று தவித்துக் கொண்டிருக்கிறார். மனசில் அப்படிப்பட்ட ஆசை இருந்தும், தமிழில் பேசுவதை அவமானமாக நினைக்கிறாராம். "அந்த பொண்ணுக்கு தமிழ் தெரியும். ஆனால் ஷ§ட்டிங் ஸ்பாட்டில் இங்கிலீஷ்லதான் பேசுது தெரியுமா? என்ன பண்ணுறது, மொழி வெறி அப்படியிருக்கு" என்று வெங்கடேஷே அலுத்துக் கொண்டார்.
படத்தில் ஹீரோவாக நடிக்கிற அர்ஜுனும் கன்னடர்தான் என்றாலும், 'தமிழ்நாட்ல தமிழில் பேசுறது தப்பில்லேம்மா' என்று சொல்ல ஏனோ தயக்கம் காட்டுகிறாராம்.
|