|
தங்க பஸ்பமே கிடைச்சாலும் தயிரு சாதம் லெவலுக்கே டீல் பண்ணுற இயக்குனர்களும் இருக்கதான் செய்யுறாங்க. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு நண்பர். நீங்க புரட்யூஸ் பண்ணினா நம்ம படத்துக்கு ரஹ்மானே இசையமைப்பாரு தெரியுமா என்று சொல்லி சொல்லியே தயாரிப்பாளர்களை பிடிக்கிற ஒரு சில இயக்குனர்களை பார்த்து பேஸ்த் அடிச்சு கிடக்குது கோடம்பாக்கம். பிரவீன்காந்த், எஸ்.ஜே.சூர்யாவெல்லாம் அந்த மாதிரி ரகம்தான்.
நம்ம பேரை வச்சு பொழச்சு போகட்டுமே என்று மனமிரங்கிய ரஹ்மானே மனசு மாற்றிக் கொள்கிற அளவுக்கு கோப்படுத்துகிறார்களாம் அவரை. லேட்டஸ்ட்டாக எஸ்.ஜே.சூர்யாவிடம் தனது கோபத்தை காட்டினாராம் இசைப்புயல்.
பவன் கல்யாண் நடிக்க புலி என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. தெலுங்குப்படமான இதற்கு ரஹ்மான்தான் மியூசிக். படம் முடிந்து ரீரெக்கார்டிங் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சூர்யா ஸ்டுடியோவுக்குள் வந்தால் ஆர்ஆர் பண்ண முடியாது. அவரை வரவே சொல்லாதீங்க என்று கூறிவிட்டாராம் இசைப்புயல்.
மீண்டும் முதல் வரியை படிக்கவும் |