|
முதல்வர் கலைஞர் அறிவாலாயம் செல்வது செய்தியல்ல. ஏனென்றால் அது அவர் தினந்தோறும் செய்து வரும் அன்றாட பணிகளில் ஒன்று. ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன் அறிவாலயம் வந்த கலைஞர், அப்படியே மூன்றாவது ஃபுளோரில் அமைந்துள்ள கலைஞர் டி.வி அலுவலகத்திற்கும் சென்றார். அங்குள்ள ஊழியர்கள் பலருக்கே கூட அதிர்ச்சி. ஏனென்றால் எப்பவோ ஒரு முறை இங்கு வந்திருந்தாராம் கலைஞர். அதோடு சரி. ஆனால் அன்று வந்தது ஏன்?
இம்மாதம் இறுதியில் கோலாலம்பூரில் எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இதில் முதல்வரின் வாழ்த்துச் செய்தியும் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்று கருதியது சன் நிறுவனம். இதையடுத்துதான் கலைஞர் டிவி அரங்கத்திற்கு வந்தாராம் கலைஞர். அங்கு காத்திருந்த சன் டிவி ஒளிப்பதிவாளர்களும், முக்கிய ஊழியர்களும் முதல்வரின் பேச்சை பதிவு செய்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
இப்படத்தின் ரிலீஸ் நேரத்தில் படம் பற்றி விரிவாகவும் பேச முன் வந்திருக்கிறாராம் கலைஞர்.
|