|
ஆளாளுக்கு ஃபுட் பால் ஆடியதில் ஆஞ்சு ஓஞ்சு போயிருக்கிறார் நித்தி. (இப்படியெல்லாம் பேர சுருக்கிட்டாங்களே என்று அதற்கும் கவலைப்படுகிறதாம் முற்றும் துறந்த(?) முனி) அவரோட சொந்தக் கதைய நான் எடுக்கப் போறேன் என்று அலர்ஜி டானிக் கொடுக்கிறார்கள் ராம்கோபால் வர்மாவிலிருந்து கோடம்பாக்கம் சர்மா வரைக்கும்! இதில் புதுசாக ஒருவரும் தலையை நுழைத்திருக்கிறார். அவர்தான் முன்னாள் கவர்ச்சி நடிகையும் ஒளிப்பதிவாளருமான ஜெயதேவி.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை பகுத்தறிவாளர் வேலு பிரபாகரனுடன் சேர்ந்து வாழ்ந்த ஜெயதேவி நிச்சயம் ஆன்மீகத்திற்கு எதிரானவராகதான் இருப்பார் என்றுதானே நினைப்பீர்கள்? அதுதான் இல்லையாம். இவரும் சில காலம் ஆசிரமம் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தவர்தான். நித்தியானந்தாவின் நல்லதுகளை மட்டுமே அறிந்தவர் என்பதால், இவர் எடுக்கப் போகும் படத்தில் சாமியாருக்கு நிச்சயம் டேமேஜ் இருக்காது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
ஆனாலும் ஜெயதேவி தன் புதிய படத்திற்கு 'ஆனந்த லீலை' என்று பெயர் வைத்திருக்கிறாராம். படம் ஆனந்தத்தை பற்றியா? லீலையை பற்றியா என்பதை பார்க்கதானே போகிறோம்?
|