|
வாரணம் ஆயிரம், அசல் பட கலெக்ஷன் சமீரா ரெட்டிக்கும் சேர்த்து மரியாதை கொடுத்திருக்கிறது. மும்பை நடிகைகளை விட கேரள நடிகைகள் மேல் ப்ரியம் வைத்திருக்கும் இயக்குனர்கள் கூட, சமீரா பக்கம் பார்வையை பதிக்கிற அளவுக்கு நிலைமையில் மாற்றம். அதிலும் கவுதம் மேனனை பொறுத்தவரை சமீராவுக்கும் அவருக்குமான உறவு, நட்பையும் தாண்டி ஒரு ஸ்டெப் ஹைட்!
வாரணம் ஆயிரத்திற்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்கப் போகும் கவுதம், அதற்கும் சமீராவையே ஹீரோயின் ஆக்கியிருக்கிறாராம். இந்த படத்திற்கும், அஜீத்தின் 50 வது படத்திற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். அஜீத் படத்தை துவங்குவதற்கு முன்பே குறுகிய கால தயாரிப்பாக இந்த படம் வரலாம். திகில் மர்மம் கலந்த இந்த கதையில் நடிகை மகேஸ்வரியின் சகோதரர் ஹீரோவாக நடிக்கிறாராம்.
ஆச்சர்யம் என்னவென்றால், இந்த படத்தில் சமீரா விலைமாதுவாக நடிக்கப் போகிறாராம். பொதுவாக நடிகைகள் ஏற்க தயங்கும் கேரக்டர் இது. கவுதமுக்காக சரி சொல்லியிருப்பாரோ? |