|
சமீபத்தில்தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்தாராம் பிரபல இந்திப்பட இயக்குனர் பிரியதர்ஷன். ஆயிரம் கருத்துகள், ஆயிரம் எதிர்ப்புகள். ஆனாலும், கலெக்ஷனில் இன்றும் முதலிடத்தில் இருக்கிறது இந்த படம். படம் முடிந்து ப்ரியதர்ஷன் போனில் அழைத்தது யாரை? ரீமாவையா, செல்வராகவனையா, கார்த்தியையா?.
கேட்டால் ஆச்சர்யமே மிஞ்சும். ரீமாசென்னுக்குதான் இந்த அழைப்பு. வாயார பாராட்டியதுடன் நேரில் வரச் சொல்லி ஒரு பரிசையும் கொடுத்திருக்கிறார். அது?
அடுத்து இவர் இயக்கப் போகும் இந்திப்படத்தில் கதாநாயகி வாய்ப்பு. ஆயிரத்தில் ஒருவனுக்காக மூன்று வருடங்களுக்கு மேலாக உழைத்த ரீமா, அதற்கான பலனை அறுவடை செய்யாமல் போய்விட்டோமே என்று அதிர்ச்சியில் இருந்த போதுதான் இத்தனை பெரிய அதிர்ஷ்டம் கதவை தட்டி அழைத்திருக்கிறது. இதற்கிடையில் தமிழில் நடிக்கவும் பெரிய நிறுவனம் ஒன்று அழைத்திருக்கிறதாம். விரைவில் அறிவிப்பேன் என்கிறார்.
மின்னல் மோகினியாச்சே, ரசிகர்களின் கண்களை கூச வைக்காமல் போய்விடுவாரா என்ன? |