|
அரசல் புரசலாக கேள்விப்பட்டதுதான். இன்று படீரென்று வெடித்து நிற்கிறது. பிரபல சின்னத்திரை இயக்குனர் சி.ஜே.பாஸ்கர் மீது செக்ஸ் புகார் கிளப்பப்பட்டிருக்கிறது. சித்தி, அண்ணாமலை, மனைவி, பெண், அஞ்சலி போன்ற புகழ் பெற்ற சீரியல்களின் இயக்குனர் இவர்.
சின்னத்திரை நடிகைகள் பலர் சங்கத்தில் குமுறியதால் பாஸ்கர் மீது ரெட் கார்டு போட்டுவிட்டார்கள். இனி அவர் தமிழில் சீரியல்களை இயக்கவே முடியாது. ராடன் டிவி நிறுவனத்தில் பல சீரியல்களை இயக்கியிருக்கும் அவர், ஒரு கட்டத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு காரணம் இதுதான் என்கிறார்கள் இப்போது.
பல நடிகைகள் நேரடியாகவே ராதிகாவிடம் அழுது புலம்பியதால் பாஸ்கரை அழைத்து ராதிகா பலமுறை கண்டித்தாராம். அப்படியும் அவரது அட்டகாசம் தொடர்ந்ததாம். நல்லவேளை, இவரது அணுகுமுறை எல்லாமே இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நடிகைகளிடம்தான் என்பதால் பெருமளவு சேதமில்லாமல் தப்பித்திருக்கிறார் மனுஷன்.
நடந்த தவறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் மூடில் இருக்கிறாராம் பாஸ்கர். |