|
யங் சூப்பர் ஸ்டார் என்று பட்டப் பெயரை மாற்றினாலும் மாற்றினார். சிம்புவின் வாழ்வில் யோகமோ யோகம்! ராவணாவுக்கு பிறகு மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறாராம் சிம்பு. வழக்கமாக சம்பள விஷயத்தில் கறார் காட்டும் சிம்பு, மணிரத்னத்தின் அழைப்புக்கு நிபந்தனையற்ற கால்ஷீட் கொடுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சம்பளமெல்லாம் ஒரு பொருட்டேயில்ல சாமி...
இதற்கிடையில் லிங்குசாமி தயாரிக்க, பூபதி பாண்டியன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார் சிம்பு. விண்ணை தாண்டி வருவாயா, கோ படத்தை முடித்துவிட்டு இதில் நடிப்பதுதான் அவரது திட்டம். யார் கோடாலியை போட்டார்களோ தெரியாது. இந்த புராஜக்ட் டமால்! ஆனால் பூபதி பாண்டியனுக்கு பதில் லிங்குசாமியே இப்படத்தை இயக்குவதாக கூறிவிட்டாராம். அதனால் அட்வான்சை திருப்பி கேட்டு நச்சரிப்பும் வரப்போவதில்லை.
எப்படி எப்படியோ இருப்பாரு சிம்பு என்று அஞ்சி நடுங்கிய கே.வி.ஆனந்தே கூட, கோ படத்தில் அவரது தொழில் பக்தியை பார்த்து ஆடிப்போயிருப்பதாக கிசுகிசுக்கிறாராம் தனக்கு நெருக்கமானவர்களிடம்.
முனி கினி அடிச்சிருச்சா.... |