|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
தானே புயல் பாதித்த கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.790 கோடியில் சிறப்பு திட்டம்: நிலவரி முழுமையாக ரத்து- ஜெயலலிதா அறிவிப்பு - கூடங்குளம் பாதுகாப்பு பற்றி அறிய தமிழக அரசின் சார்பில் நிபுணர் குழு நியமனம்: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு - சுப்பிரமணியசாமி தொடர்ந்த ஸ்பெக்ட்ரம் வழக்கு: சிதம்பரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி-சி.பி.ஐ. கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

வடிவேலு வேண்டாம்! சேரன் பிடிவாதம்.

சேரனின் பெரும்பாலான படங்கள் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்தான். அப்படியிருக்க, தனியாகவே பொக்கிஷம் என்ற படத்தை இயக்கி வருகிறார் சேரன். மாயக்கண்ணாடி தோல்விக்கு பிறகு ஒரு கட்டாய வெற்றிக்காக காத்திருக்கும் இவர், ஒவ்வொரு காட்சியையும் மிக உன்னிப்பாக உருவாக்கி வருகிறாராம். நல்ல விஷயம்தான். ஆனால் அதுவே பட்ஜெட்டை பல மடங்கு உயர்த்திவிடும் போலிருக்கிறது என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

பொக்கிஷத்தை முதல் காப்பி அடிப்படையில் உருவாக்கி வரும் சேரன், சின்ன சின்ன காட்சிகளுக்காக கூட நாள் கணக்கில் செலவிடுகிறாராம். பட்ஜெட்டை மீறினால் தனது கையிலிருந்துதான் செலவழிக்க வேண்டும் என்பது தெரிந்தும் செலவு செய்வது அவரது நேர்த்திக்கு அடையாளம்! பாராட்டுகள். ஆனால் ஒரு விஷயத்தில் அடம் பிடிப்பதைதான் பொறுக்க முடியாமல் தவிக்கிறாராம் தயாரிப்பாளர்.

கதை கனமாக இருந்தாலும் வடிவேலு மாதிரி யாராவது இருந்தால்தானே ரசிக்க முடியும்? இது தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்கின் ஆசை. வைகை புயல் உள்ளே வந்து வேகமாக வீசினால் கதையே சேதாரம் ஆகிவிடும் என்பது சேரனின் சமாதானம். இந்த இழுபறியில் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறார்கள். வெற்றிக் கொடி கட்டு போன்ற படங்களில் வடிவேலுவையும் வைத்துக் கொண்டு கதையையும் நேர்த்தியாக சொன்னாரே? அதுபோல இப்போதும் சொல்ல முடியாதா என்ன? ஞாயமாதான் இருக்கு!

-ஆர்.எஸ்

பாலை
பாலை
Download Beta
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter