மீடியாக்களிடம், 'நாங்க நடிக்கப் போறதா வர்ற செய்தியில் உண்மையில்லை' என்று சொல்லி வருகிறார்கள் லிங்குசாமியும், கரு.பழனியப்பனும். ஆனால், இவர்களின் ஹீரோ ஆசையை அவ்வப்போது போட்டு உடைக்கிறார் இயக்குனர் அமீர். சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய அமீர், நடிகை, நடிகர்களின் படங்களை மட்டும்தான் பத்திரிகைகளில் போடுகிறீர்கள். இன்னும் கொஞ்ச நாட்களில் நானும் லிங்குசாமியும் பேசிக் கொண்டிருப்பதையும் படம் எடுத்து போடுவீர்கள். காரணம் என்னை போல அவரும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறார் என்றார்.
லிங்குசாமி ஹீரோவாக நடிக்க முடிவெடுத்திருப்பதற்கும் இதற்கும் சம்பந்தம் உண்டா தெரியவில்லை. நயன்தாராவுக்கு ஒரு கோடியே பத்து லட்சம் சம்பளம் தர முடிவு செய்திருந்தவர், அந்த எண்ணத்திலிருந்து தன்னை மாற்றிக் கொள்ளவில்லையாம். குசேலன், சத்யம் ஆகிய இரு படங்களின் தோல்விக்கு பிறகு சம்பளத்தை குறைத்து தரச்சொல்லி வந்த பிரஷர்களை கண்டும் காணாமல் விட்டு விட்டார் லிங்கு.
ஒருவேளை தான் ஹீரோவாக நடிக்கவிருக்கும் படத்தில் நயன்தாராவை ஜோடியாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம் காரணமாக இருக்குமோ?
-வளர் தமிழ்ச்செல்வன்
|