எப்பிடியெல்லாம் யோசிங்கிறாங்கப்பு... ஆடிக்காத்துல ஒரு பொண்ணு அரை பாவாடை கட்டிக்கிட்டு தெருவுக்கு வந்தா எப்படியிருக்கும்? காத்தடிக்கும். பாவாடை பறக்கும். அப்புறமென்ன...? அனல் பறக்கும் டூயட்தான்!
சஞ்சய்ராம் இயக்கிவரும் 'பூவா தலையா' என்ற படத்தில்தான் மேற்கண்ட சூடான காட்சி. எரிகிற தீயில் மேலும் நெய்யை ஊற்றுகிற மாதிரி வரிகளை ஊற்றிருக்கிறார் பாடலாசிரியர்.
தீக்கோழி... தீக்கோழி...
தீக்கோழிடா...
தீப்பிடிச்ச அந்த இடம்
தித்திக்கும்டா...
ஆச்சாரமான பிராமண குடும்பத்தை சேர்ந்தவராக நடித்திருக்கிறார் ஷெரீன். இவருக்குதான் மேலே சொன்ன சுச்சுவேஷனும், பாடலும். கொம்புதேவன் என்ற கேரக்டரை மையப்படுத்தி கதையை உருவாக்கியிருக்கிறார் சஞ்சய்ராம். கிருஷ்ணகுமார் கொம்புதேவனாக நடித்திருக்கிறார். இன்னொரு ஹீரோவாக உதயா நடித்திருக்கிறார். வில்லன் வேடத்திற்கு வாலி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த எஸ்.வி.சேகர், மதுரை தேனி பகுதிகளில் எடுக்கப்படும் படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துவிடுகிறது. அந்த வரிசையில் பூவா தலையாவும் வெற்றிப்படமாகும் என்றார். பலிக்கட்டும் வார்த்தைகள்...
-ஆர்.எஸ். |