“எம்.எஸ்.வி எங்க சொத்து. அவரது பாட்டை திருட எங்களுக்கு உரிமை உண்டு. எம்.எஸ்.வி இசையை திருடித்தான் எங்க பொழப்பு ஓடிகிட்டு இருக்கு. இளையராஜாவோட நூற்றுக்கணக்கான பாடல்கள் எம்.எஸ்.வி கிட்டே இருந்து திருடியதுதான். இந்த விஷயத்துல ராஜா கில்லாடி...” இப்படி கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிந்தது இளையராஜாவின் தம்பி கங்கை அமரன்தான்!
எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த குங்குமக்காரி ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த கங்கை அமரன் இப்படி பகீர் திடீரென்று பேசி வைக்க, அதிர்ந்து போனார்கள் ராஜாவின் ரசிகர்கள். அமரன் இப்படி பேச என்ன காரணம்?
யுவன் சங்கர்ராஜா, கார்த்திக் ராஜா ஆகிய ராஜாவின் வாரிசுகளும், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, ஆகிய கங்கை அமரன் வாரிசுகளும் ஒண்ணு மண்ணா இருந்தாலும், தந்தை குலங்களுக்குள் ஏற்பட்ட விரிசல் இன்னும் சரி செய்யப்படவில்லை. குடும்ப விழாக்களில் மிகவும் அரிதாக சந்தித்துக் கொள்வதோடு சரி. மற்றபடி பேச்சு வார்த்தை அவ்வளவாக இல்லை என்கிறார்கள். இந்த நிலையில்தான் அமரனின் பேச்சில், அளவுகடந்த ஊசிக்குத்தல்!
ராஜாவுக்கு வலிகிறதோ, இல்லையோ? இதைக்கேட்ட அவரது ரசிகர்களுக்கு வலி ரொம்பவே!
-விஜய் |