அஜீத்தின் 49 வது படத்தின் இயக்குனராக 99 சதவீதம் முடிவு செய்யப்பட்டு விட்டார் விஷ்ணுவர்த்தன். சர்வம் படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் இருந்தாலும், சதா சர்வ(ம்) காலமும் அஜீத்தின் புதிய பட கதையை பற்றியும் யோசித்துக் கொண்டிருக்கிறாராம் விஷ்ணு.
ஆக்ஷன் காட்சிகள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவருக்கு திடீரென்று மிரட்டலான காட்சி ஒன்று மனதில் தோன்ற, விழுந்தடித்துக் கொண்டு அஜீத்திற்கு போன் செய்தாராம். தான் யோசித்திருந்த காட்சியை போனிலேயே விளக்க, ‘தல’கால் புரியாமல் சந்தோஷப்பட்டாராம் தல. பில்லா மாதிரி இரண்டு மடங்கு ஸ்டைலிஷா வரணும் என்று அஜீத் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில் படத்தை தயாரிக்கும் சிவாஜி புரடக்ஷன் நிறுவனமும், தனது ரசிகர்களும் ஒரு சேர சந்தோஷப்படும் அளவுக்கு பிரபு சொன்னார் ஒரு யோசனை. ஆனால் இதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம் அஜீத். அது? தனது மகனுக்கே இந்த வாய்ப்பை கொடுக்கலாம் என்று இளைய திலகம் விரும்பியதுதான்.
-ஆர்.எஸ். |