First Page
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்தியாவுக்கு யுரேனியம் தர முடியாதென ஆஸ்திரேலியா அறிவிப்பு - தமிழக அமைச்சர் பெரியகருப்பன் விபத்தில் படுகாயம் - ரஜினிகாந்த்தின் எந்திரன் திரைப்பட ஷுட்டிங் அமெரிக்காவில் இன்று ஆரம்பம்: கதாநாயகி ஜஸ்வர்யாராய் - அணுசக்தி ஒப்பந்த இறுதி கையெழுத்திட மன்மோகன்சிங் அமெரிக்கா பயணம் - சன் டிவி இன்று முதல் காமெடித்திரை புதிய நகைச்சுவை டிவி சேனல் துவக்கம் - சென்னையில் 6000 பிள்ளையார்கள் கடலில் கரைப்பு - தமிழக மீனவர்கள் மீது தாக்குதலை நிறுத்த இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் - இந்தியா அணுகுண்டு சோதனை நடத்துவதை எந்த ஒப்பந்தத்தாலும் தடுக்க முடியாது: அப்துல் கலாம் உறுதி - ஒலிம்பிக் நாயகன் அபிநவ் பிந்தரேவுக்கு சென்னையில் டாக்டர் பட்டம்
வைரமுத்துவுக்கு இணையாக எழுதியிருக்கிறார்...
-எழுத்தாளரை பாராட்டிய மதன்

'நடவு' என்ற முதல் நாவல் மூலம், சுமார் பத்து வருடங்களுக்கு முன் எழுத்துலகில் Madhan Book Releaseநுழைந்தவர் பொன்.முருகேசன். சமீபத்தில் இவர் எழுதிய 'அனைத்துலகும் இன்பமுற' முருகேசனின் 51-வது நூல். இதில் முழு நாவலை கவிதையாக வடித்திருக்கிறாராம் இவர். இந்த பத்து வருடத்தில் பொன்.முருகேசன் எழுத்துலகிற்கு தனது இனிஷியலையே தந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இதை நாம் சொல்வதை விட, எழுத்துலகின் பிதாமகர்கள் சொல்வதுதானே சிறப்பு?

“வைரமுத்துவுக்கு இணையாக எழுதியிருக்கிறார்” என்று பொன்.முருகேசனை வாழ்த்தியிருக்கிறார் எழுத்தாளரும் கார்டூனிஸ்டுமான மதன்! முருகேசனும், வைரமுத்துவும் எழுதிய இசைக்காற்று என்ற ஆல்பத்தை 2007-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிட்ட மதன் இப்படி பாராட்டியிருக்கிறார் என்றால், பொன்.முருகேசனை நாமும் பாராட்டிதான் ஆக வேண்டும்.

பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர் என்ற பன்முகம் கொண்ட பொன் முருகேசனின், இரு நூல்களை இளம் தொழிலதிபர் முருகவேல் ஜானகிராமன் வெளியிட, மதன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் 'சிந்தனைக்கு சில' என்ற நூல் பற்றி குறிப்பிட்ட மதன், "திருக்குறள் மாதிரி வீரியம் அதிகமுள்ள நூல் இது" என்றாராம்.

-ஆர்.எஸ்.

hotnews
.
indiaproperty
|
|
|
|
|
|
|
 
|
|
|
|
|
|
|
|
|
Counters
Web Counter