மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார் சிந்து துலானி. சுள்ளானுக்கு பிறகு மன்மதன் படத்தில்தான் சிந்தாமல் சிதறாமல் காட்டியிருந்தார்கள் சிந்து துலானியை! அதன்பின்பும் கூட எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையவில்லை இவருக்கு. கவலையில் இருந்தவரிடம், ஒரு பாடலுக்கு ஆட அழைத்தால் எப்படியிருக்கும்? சீச்சி... இந்த கோலிவுட்டே வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டார். பல வருடங்கள் கழித்து சிந்துவை அழைத்தது சென்னை. இந்த முறை வந்திருப்பது ஒரு பாடலுக்கு ஆட அல்ல, ஒரு முழு படத்திலும் நடிப்பதற்கு! பந்தயம் படத்தில் நிதின் சத்யாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
காலையில் இருந்து மாலை வரை பந்தயத்திற்காக கால்ஷீட் கொடுத்திருந்தாலும், மாலை நேர கால்ஷீட்டை மட்டும் ஒரே ஒருவருக்கு கொடுத்து வருகிறாராம். மலையான படம் எடுத்த ரமண இயக்குனர்தான் அந்த ஒருவர். திருமணம் ஆகி மனைவியோடு வசித்து வரும் இந்த இயக்குனர், சிந்து துலானியையும் தனது வீட்டில் தங்க வைத்திருக்கிறாராம்.
இயக்குனரின் மனைவி இதை கண்டிக்க, பிரளயமே நடக்கிறதாம் தினந்தோறும். தன்னால் பிரச்சனை வருகிறதே என்பதை உணராத நடிகையும், படப்பிடிப்பு முடிந்ததும் இயக்குனரின் வீட்டுக்கு வந்துவிடுகிறாராம். இருவரையும் பிரிக்க ஸ்கிரீன் பிளே செய்து கொண்டிருக்கிறார் வீட்டம்மா!
-வம்புராசா |